டெல்லி : அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் தான் காக்ணிசண்ட். இந்த கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட காலாண்டு முடிவுகளில், வரலாற்றிலேயே முதன் முறையாக வளர்ச்சியில் பின் தங்கியுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் காக்னிசண்ட் நிறுவனம் அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டது என்றாலும், இதன் ஊழியர்களில் பெரும்பகுதி இந்தியர்கள் தான். ஆக நியூஜெர்சியை அடிப்படையாக கொண்டுள்ள இந்த நிறுவனத்திலிருந்து வேலை நிறுத்தம் மேற்கொள்ளலாம் என்று கருத்தப்படுகிறது.
எனினும் இந்த நிறுவனத்தில் அதிகளவிலான இந்தியர்கள் பணி புரிவதால் அவர்கள் வெளியேற்றப்படலாம் என்ற அச்சமும் நிலவி வருகிறது. இந்த நிலையில் பல ஆயிரம் இந்திய ஐ.டி ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயமும் உள்ளது.
பாதியாக குறைந்த வருமானம்
கடந்த வாரம் வெளியிட்ட காக்ணிசண்ட் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளில் எதிர்பார்க்கப்பட்ட வருவாயை விட, கடந்த மார்ச் மாததில் பாதியாக குறைந்திருந்தது. இதை எதிர்பார்க்காத நிறுவனம், மேலும் தற்போதைய காலகட்டங்களில் ஐ.டி சேவைகள், அவுட் சோர்ஸிங்க் பணி உள்ளிட்ட பல வேலைகள் குறைந்தும் வருகின்றன. இதனால் சம்பளதாரர்களுக்கு நிதி சேவையும் தொழிலில் மந்தமான நிலையும் நிலவி வருகிறது.
குறைந்து வரும் அவுட்ஸோர்சிங்க் பணி
கடந்த ஜனவரி - டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் மிக மந்த நிலையிலேயே காணப்பட்ட அவுட்ஸோர்சிங்க் பற்றிய பணிகளும் வெகுவாக குறைந்துள்ளன. இதையடுத்து இந்த நிறுவனம் தற்போது ஒரு மறு சீரமைப்பு திட்டத்தினை உருவாக்கியுள்ளது என்றும், இதன் படி கூடுதலான பணியாளர்கள் உள்ளனர் என்றும் காக்ணிசண்ட் தெரிவித்துள்ளதாம்.
வங்கியிலிருந்தும் எச்சரிக்கை
மேலும் இது குறித்து இந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கூறுகையில் ஆண்டின் இரண்டாவது பாதியில் செலவழிக்கப்பட்ட தொகையை அடுத்து, வங்கியில் கடன் குறித்தும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்திய அதிகாரிகளுக்கு 117 பில்லியன் டாலர்கள்
இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய அதிகாரிகளுக்கு உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பின் படி, 117 பில்லியன் டாலர்களையும் அளித்துள்ளது கவனிக்கதக்கது. இந்த காரணத்தினால் இந்த நிறுவனத்தின் இயக்க தொகை (operating margin) 13.1 சதவிகிதமாக குறைந்துள்ளது எனவும். இதுவே டிசம்பர் காலாண்டில் 16.8 சதவிகிதமாக இருந்ததும் கவனிக்கதகக் விஷயமாகவே உள்ளது. இந்த நிலையில் இந்த வேலை நிறுத்தம் உறுதி செய்யப்பட்டால் பல ஆயிரம் இந்திய ஊழியர்கள் வேலையிழக்கும் சூழ்னிலை உள்ளது.


Click it and Unblock the Notifications