மும்பை: கடும் நிதி பிரச்சனையால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது விமான சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தை வாங்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என எஸ்.பி.ஐ அறிவித்திருந்தது. இந்தவகையில் ஜெட் ஏர் வேஸ் நிறுவனத்தை வாங்க பிரிட்டிஷ் தொழிலதிபர் தொழிலதிபர் ஜேசன் அன்ஸ்வொர்த் விருப்பம் தெரிவித்துள்ளராம்.
மேலும் இந்த நிறுவனத்தை வாங்க ஜெட் ஏர்வேசஷ் , விரைவில் கடனளிப்பாளர்களின் தலைவரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு (எஸ்.பி.ஐ.) முறையாக அணுகி அறிக்கையை சமர்பிப்பதாகவும் கூறியுள்ளாராம்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அட்மாஸ்பியர் இன்டர்கான்டினென்டல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை நிறுவியவர் தான் ஜேசன் அன்ஸ்வொர்த், இவர் இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகும்.
மேலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஜெட் ஏர்வேஸ் பற்றி, உள்நாட்டு பங்கு பரிவர்த்தனை நிறுவனங்கள், பிரிட்டிஷ் தொழில் முனைவோரின் கடன்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான ஒரு வாய்ப்பை மேற்கோள் காட்டி, தற்காலிகமாக நியமிக்கப்பட்ட விமான நிறுவனத்திடம் இருந்து விளக்கம் கேட்டதே அன்ஸ்வொர்த்துக்கு ஜெட் ஏர்வேஸை அறிமுகப்படுத்தியதாம்.
இந்த நிலையில் கடந்த மாதம் இது குறித்து ஜெட் ஏர்வேஸ்சை அணுகிய ஜேசன் அன்ஸ்வொர்த்திடம் ஜெட் ஏர்வேஸ் கூறியதாவது, இந்த விஷயத்தில் முறையான வழியில் ஏல ஒப்பந்தம் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் முறையாக எஸ்பிஐ கேப்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் முறையாக ஈடுபடுமாறும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாம்.
இது எந்த அளவுக்கு உண்மை சாத்தியம் என்று தெரியவில்லை. எனினும் இப்படி நடந்தால் நன்றாக இருக்கும். இந்திய நிறுவனங்கள் ஏதும் ஆர்வம் காட்டாத நிலையில் ஜெட் ஏர்வேஸுக்கு கிடைத்த நல்ல வாய்ப்புதான் இது. இதனால் பல ஆயிரம் ஊழியர்கள் வேலை வாய்ப்பினை பெறுவார்கள். இதோடு ஜெட் ஏர்வேஸ் கடன் பிரச்சனியிலிருந்தும் மீளும் வாய்ப்பு உள்ளது.