டெல்லி : இந்தியாவின் முக்கிய பனக்காரர் யார் என்றால் அடுத்த நிமிடம் அனைவரும் கூறுவது அம்பானி தான். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கூறும் ஒரே பதில் அம்பானி குடும்பம் தான். அந்தளவிற்கு லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்து வந்தவர்கள் தான் அம்பானி.
ரிலையன்ஸ் குழுமத்தலைவர் முகேஷ் அம்பானி எது எடுத்தாலும் சக்ஸஷ் என்றிருக்க, மறுபுறம் அனில் அம்பானியின் நிலையோ பரிதாபகரமானதாக காணப்படுகிறது. எந்த தொழில் தொடங்கினாலும் அதில் வெற்றி பெறுவது முகேஷின் பாணியாக இருக்கும். அதே நேரம், எந்த தொழில் தொடங்கினாலும் அதில் தோல்வியை சந்தித்து கடனாளியாவது தான் அனிலின் பாணியாக உள்ளது. இத்தகைய இக்கட்டான நிலையில் சிக்கித் தவித்து வரும் அனில் அம்பானியின் சாம்ராஜ்யம் இப்போது திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் குழுமம் கடந்த சில ஆண்டுகளாகவே பெருத்த நஷ்டத்தை சந்தித்து வந்த நிலையில் கடந்த மே7ம் தேதி எஸ்.பி.ஐ தலைமையிலான குழு இந்த நிறுவனத்தின் மீது திவால் நடவடிக்கை எடுப்பதற்கான செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், இதற்கான முதல் கட்ட நடவடிக்கை தான் இந்த தீர்மானம் என்றும் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ரிலையன்ஸ் குழுமம் தொழில் நிபுணர்கள் மூலமாக ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் அணுகி 13 மாதங்களுக்கு தணிக்கையை தள்ளி வைத்தது. இந்த நீட்டிப்பு கடந்த ஏப்ரல்30, 2018 முதல் மே-30, 2019 வரையில் நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த கெடு முடிய இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் அடுத்து ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் என்ன செய்யபோகிறது என்று தெரியவில்லை.

இந்த நிலையில் மேலும், ரியல் எஸ்டேட் மற்றும் ஸ்பெக்ட்ரம் சொத்துக்களை monetising மூலம் கடனளிப்போர் திரும்ப செலுத்த பொதுமக்களிடம் செய்யப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் இந்த நிறுவனம் வெற்றிபெறவில்லை.
மேலும் அனில் அம்பானியின் சகோதரர் கடந்த மாதம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானிக்கு, மீண்டும் எரிக்சன் நிறுவனத்திற்கு அளிக்க வேண்டிய நிலுவை தொகையில் 480 கோடி ரூபாயை கொடுத்தார். இதனால் உச்சநீதி மன்றத்தின் ஒரு சாத்தியமான சிறைத் தண்டனையைத் அனில் அம்பானியால் தவிர்க்க முடிந்தது.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தை திவால் நடவடிக்கை முன்பு அனைத்து அறிக்கைகளும் தயார் செய்யப்பட வேண்டும் இதற்காக வி.பி.சிங்க் மற்றும் ரவிக்குமார் துரைசாமி தலைமையிலான மும்பை தலைமையிலான இந்த குழு மே-30 வரையிலான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications