டெல்லி: இந்தியாவின் ஜிடிபி டேட்டாக்களைக் கணக்கிட மோடி அரசு பல தவறுகளைச் செய்திருக்கிறார்கள் என என்.எஸ்.எஸ்.ஓ தோலுரித்துக் காட்டி இருக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு மோடி அரசு இந்தியாவின் ஜிடிபியைக் கணக்கிட, அடிப்படை ஆண்டை 2004 - 05-ல் இருந்து 2011 - 12-ஆக மாற்றியது. புதிய அடிப்படை ஆண்டுகள் படி அடுத்தடுத்த ஆண்டின் ஜிடிபி தரவுகளை வெளியிட்டால் பரவாயில்லை. ஆனால் நம் மோடி பின் நோக்கிச் சென்று காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின் ஜிடிபி தரவுகளையே மாற்றி வளர்ச்சியைக் குறைத்துக் காட்டியது.
உதாரணமாக, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 2010 - 11 நிதி ஆண்டில் தான், இது வரை இந்தியப் பொருளாதாரம் காணாத 10.26 சதவிகித ஜிடிபி வளர்ச்சியைக் காட்டினார்கள். ஆனால் நம் மோடி புதிய அடிப்படை ஆண்டான 2011 - 12-ன் அடிப்படையில் 2010 - 11-ம் ஆண்டில் ஜிடிபி வளர்ச்சி வெறும் 8.5 சதவிகிதம் தான் எனச் சொன்னார். அதோடு நிற்காமல் காங்கிரஸின் ஆட்சிக் காலத்தில் இந்தியப் பொருளாதாரத்தின் சராசரி வளர்ச்சியே 6.67 சதவிகிதம் தான் எனவும் கணக்கிட்டுச் சொன்னார்கள். சர்ச்சைப் புயலில் சிக்கியது இந்திய ஜிடிபி.
இந்த சர்ச்சைகள் எல்லாம் இப்போது தான் கொஞ்சம் ஓய்ந்திருந்தது. ஆனால் இன்று என்.எஸ்.எஸ்.ஓ அமைப்பின் கருத்தால், மீண்டும் உயிர் பெற்றுவிட்டது இந்த ஜிடிபி சர்ச்சைகள். இந்த பிரச்னைக்கு உயிர் கொடுக்க, ஜிடிபியைக் கணக்கிட மோடி அரசு நான்கு தவறுகளைச் செய்திருக்கிறார்கள். அப்படி என்ன செய்துவிட்டார்கள் பாஜகவினர். ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
1. தலையீடு
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட செயல்பாட்டு அமைச்சகத்தின் (MOSPI) கீழ் இயங்கும் அமைப்பு தான் இந்த மத்திய புள்ளியியல் அலுவலகம் (CSO). இவர்கள் தான் ஜிடிபி தரவுகளை கணக்கிடுவது, வெளியிடுவது எல்லாம் பார்த்துக் கொள்கிறார்கள். இந்த அலுவலகம் தான் இந்தியாவின் புள்ளியியல் சார்ந்த அனைத்து விஷயங்களையும் கவனித்துக் கொள்கிறது. ஆனால் இவர்கள் ஒவ்வொரு டேட்டாக்களைக் கணக்கிட்டு வெளியிடும் போதும் மத்திய அரசு நேரடியாக தலையிட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக நிதி அயோக். ப சிதம்பரமே நிதி அயோக்கின் வேலை டேட்டாக்களைச் சரி செய்து வெளியிடுவது தானா..? என கலாய்க்கும் அளவுக்கு போனது நிதி அயோக்கின் தலையீடு.
2. எம் சி ஏ 21
பழைய ஜிடிபி டேட்டாக்களில் மத்திய ரிசர்வ் வங்கி, தனியார் நிறுவனங்களிடம் எடுத்த சர்வேக்களில் கிடைத்த டேட்டாக்களைப் பயன்படுத்தி, இந்திய ஜிடிபியை கணக்கிட்டிருக்கிறார்கள்.
ஆனால் மோடி ஆட்சிக் காலத்தில் 2015-ம் ஆண்டில் இருந்து வெளியிட்ட புதிய ஜிடிபி டேட்டாக்களில், நிறுவனங்களே முன் வந்து சமர்பிக்க வேண்டிய MCA 21 டேட்டாபேஸ் தகவல்களை, அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டு இருக்கிறார்கள்.
3. ஆராயவில்லை
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், சோதனைக்கு உட்படுத்தாத MCA 21 டேட்டாபேஸின் நம்பகத் தன்மையை அதிகாரிகள் உட்பட, பலரும் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார்கள். அதன் உண்மைத் தன்மை மீதும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதற்கு எல்லாம் பதில் சொல்லாமல் , MCA 21 டேட்டா பேஸை ஆராயாமலேயே இந்தியாவின் ஜிடிபியை கணக்கிட்டு வெளியிட்டிருக்கிறார்கள் பாஜகவினர்.
4. தவறாக வகைப்படுத்தல்
இந்த MCA 21 டேட்டா பேஸில் சேவைத் துறையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிறுவனங்களில், மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் தவறாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது அல்லது அந்த நிறுவனங்கள் எங்கு இருக்கிறது என்றே கண்டு பிடிக்க முடியவில்லை. இதைக் குறித்துப் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு விரைவில் பதிலளிக்கப்படும் என்று சொல்லி இருக்கிறது அரசு. இப்படி ஒரு நிறுவனமே எங்கு இருக்கிறது என்றே கண்டு பிடிக்க முடியாத தரவுகளை வைத்துக் கொண்டு தான் இந்தியாவின் ஜிடிபியைக் கணக்கிட்டிருக்கிறார்கள்.
டெல்லி பேராசிரியர்
இந்தியாவிலேயே ஜிடிபி கணக்கீட்டில் மட்டும் தான் இந்த MCA 21 என்கிற டேட்டாபேஸ் பயன்படுத்தப்பட்டிருப்பதாக டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் சொல்லி இருக்கிறார். ஒருவேளை ஜிடிபியைக் கணக்கிட இந்த MCA 21 டேட்டாக்களையே அதிகம் பயன்படுத்தி இருந்தால் இது மிகப் பெரிய பிரச்னை தான் என்றும் எச்சரிக்கிறார்.
மோகனன்
என். எஸ்.எஸ்.ஓ தலைவராக இருந்த மோகனன் "இந்தியாவின் ஜிடிபி டேட்டாக்களைக் கணக்கிட MCA 21 டேட்டா பேஸைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இது ஒரு பெரிய மாற்றம் தான். ஆனால் இப்படி புதிய டேட்டா பேஸ்களைப் பயன்படுத்தும் முன், பல முறை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின் தான் பொருளாதார டேட்டாக்களைத் தயாரிக்க பயன்படுத்தப்படும். அப்போது தான் ஒரு டேட்டா பேஸின் துல்லியமும் முழுமைத் தன்மையும் உறுதி செய்யப்படும். இப்போது மத்திய புள்ளியியல் துறை, இப்படிப்பட்ட சோதனைகளை எல்லாம் MCA 21 டேட்டா பேஸில் செய்தார்களா இல்லையா..? என பதிலளிக்க வேண்டும்" என்கிறார். என்னங்க மோடி ஜி ஒன்னு ரெண்டு பொய்யா இருந்தா ஓகே, எல்லாமே பொய்யின்னா என்னத் தான் செய்யுறது..?
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்



Click it and Unblock the Notifications