கல்கத்தா : மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவில் தலைமையிடமாகக் கொண்ட செயல்பட்டு வரும் இந்திய பன்னாட்டு நிறுவனமே ஐ.டி.சி ஆகும். இது கடந்த 1910 ஆம் ஆண்டில் 'இம்பீரியல் டெபாக்கோ ஆப் இந்தியா லிமிடெட்' என்ற பெயரில் நிறுவப்பட்டது. பின்னர் இந்த நிறுவனம் 1970 ஆம் ஆண்டில் India Tobacco Company Limited என மறுபெயரிடப்பட்டது. இதற்கு பின்னர் மீண்டும் 1974ல் I.T.C என்று மாற்றப்பட்டது.
சிகரெட் தொழிலையே பிரதான தொழிலாக கொண்ட இந்த நிறுவனத்தின் நீண்ட கால தலைவராக இருந்தவர் தான். ஒய்.சி. தேவேஷ்வர். இவருக்கு 72 வயது ஆகிறதாம். இந்த நிலையில் சில ஆண்டுகளாக உடல் நிலையால் பாதிக்கப்பட்ட அவர் இன்று ஐ.டி.சியையும் உலகத்தையும் விட்டு சென்றது அனைத்து மக்களுக்கு ஒரு பேரிழப்பே. குறிப்பாக கார்ப்பரேட் உலகில் இது மிகப்பெரிய இழப்பே.
இந்தியாவில் மிக நீண்ட கால சேவை நிறுவனமான ஐ.டி.சி யில் 1996-ம் ஆண்டு மிக மோசமான நெருக்கடியை சந்தித்தபோது, தேவேஷ்வர் தான் இந்த நிறுவனத்தின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டாராம்.
நஷ்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்த தேவேஷ்வர்
இந்த நிலையில் தேவேஷ்வரின் பன்முகமான முயற்சிகளுக்கு அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களிடம் மிகப் பெரிய எதிர்ப்பை கிளப்பியது. இருப்பினும் தனது அயராத முயற்சியினால் இரண்டு ஆண்டுகளுக்குள் இழப்புகளை ஒரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்தாராம். அதோடு நஷ்டத்தை தரும் சமையல் எண்ணெய் மற்றும் நிதி சேவைகள் வர்த்தகத்திலிருந்தும் வெளியேறினார்.
ஐ.டி.சி புதிய புதிய துறைகளில் கால் பதித்தது.
அதோடு நான்கு ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் தலைவரும் ஆனார். அந்த சமயத்தில் ITC மீண்டும் புதிய வணிக பிரிவுகளில் நுழைய முயன்றது. குறிப்பாக காக்டெய்ல் தயாரிப்புகளுடன் தொடங்கியது. அதோடு விரைவில் உணவு போன்ற துறைகளிலும் கால் பதித்தது.
ஐ.டி.சிக்கு 10 மடங்கு லாபம்
அந்த சமயத்தில் இவரது தலைமையின் மூலம், ஐடிசி நிறுவனத்தின் வருவாயானது பத்து மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது 5,200 கோடி ரூபாயிலிருந்து 51,500 கோடி ரூபாயாக உயர்ந்ததாம். அதே நேரத்தில் பங்குதாரர்களின் வருமானமும் 23.3% என்ற விகிதத்தில் பங்குதாரர்களுக்கு கிடைத்ததாம்.
தேவேஷ்வருக்கு பத்ம பூஷன்
இந்த நிலையில் 2011 ஜனவரியில், தேவேஷ்வருக்கு சிறந்த சேவைக்கான பத்ம பூஷன் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டதும் கவனிக்கதக்கது.
தேவேஷ்வரை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும்
சிஐஐ தலைவரான விக்ரம் கிர்லோஸ்கர் கூறுகையில், தேவேஷ்வர் சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளுடனான வேலையிலும், அதன் மூலம் அவர் மில்லியன் கணக்கான மக்களுக்கு புதிய வாழ்வாதார வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளார். இதைச் செய்வதன் மூலம் புதிய வழிகளில் தொழில்நுட்பத்தை, விவசாயம் மற்றும் தொழிற்துறையைத் தக்கவைத்துக் கொள்வதற்கான புதிய மாதிரிகளை அவர் அறிமுகப்படுத்தினார். இதுபோன்ற கருத்துகளை அவர் செய்த அனைத்து செயல்களிலும் புகுத்தினார். ஆக இனி ஒவ்வொரும் அதனை பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications