கல்கத்தா : மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவில் தலைமையிடமாகக் கொண்ட செயல்பட்டு வரும் இந்திய பன்னாட்டு நிறுவனமே ஐ.டி.சி ஆகும். இது கடந்த 1910 ஆம் ஆண்டில் 'இம்பீரியல் டெபாக்கோ ஆப் இந்தியா லிமிடெட்' என்ற பெயரில் நிறுவப்பட்டது. பின்னர் இந்த நிறுவனம் 1970 ஆம் ஆண்டில் India Tobacco Company Limited என மறுபெயரிடப்பட்டது. இதற்கு பின்னர் மீண்டும் 1974ல் I.T.C என்று மாற்றப்பட்டது.
சிகரெட் தொழிலையே பிரதான தொழிலாக கொண்ட இந்த நிறுவனத்தின் நீண்ட கால தலைவராக இருந்தவர் தான். ஒய்.சி. தேவேஷ்வர். இவருக்கு 72 வயது ஆகிறதாம். இந்த நிலையில் சில ஆண்டுகளாக உடல் நிலையால் பாதிக்கப்பட்ட அவர் இன்று ஐ.டி.சியையும் உலகத்தையும் விட்டு சென்றது அனைத்து மக்களுக்கு ஒரு பேரிழப்பே. குறிப்பாக கார்ப்பரேட் உலகில் இது மிகப்பெரிய இழப்பே.
இந்தியாவில் மிக நீண்ட கால சேவை நிறுவனமான ஐ.டி.சி யில் 1996-ம் ஆண்டு மிக மோசமான நெருக்கடியை சந்தித்தபோது, தேவேஷ்வர் தான் இந்த நிறுவனத்தின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டாராம்.
நஷ்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்த தேவேஷ்வர்
இந்த நிலையில் தேவேஷ்வரின் பன்முகமான முயற்சிகளுக்கு அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களிடம் மிகப் பெரிய எதிர்ப்பை கிளப்பியது. இருப்பினும் தனது அயராத முயற்சியினால் இரண்டு ஆண்டுகளுக்குள் இழப்புகளை ஒரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்தாராம். அதோடு நஷ்டத்தை தரும் சமையல் எண்ணெய் மற்றும் நிதி சேவைகள் வர்த்தகத்திலிருந்தும் வெளியேறினார்.
ஐ.டி.சி புதிய புதிய துறைகளில் கால் பதித்தது.
அதோடு நான்கு ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் தலைவரும் ஆனார். அந்த சமயத்தில் ITC மீண்டும் புதிய வணிக பிரிவுகளில் நுழைய முயன்றது. குறிப்பாக காக்டெய்ல் தயாரிப்புகளுடன் தொடங்கியது. அதோடு விரைவில் உணவு போன்ற துறைகளிலும் கால் பதித்தது.
ஐ.டி.சிக்கு 10 மடங்கு லாபம்
அந்த சமயத்தில் இவரது தலைமையின் மூலம், ஐடிசி நிறுவனத்தின் வருவாயானது பத்து மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது 5,200 கோடி ரூபாயிலிருந்து 51,500 கோடி ரூபாயாக உயர்ந்ததாம். அதே நேரத்தில் பங்குதாரர்களின் வருமானமும் 23.3% என்ற விகிதத்தில் பங்குதாரர்களுக்கு கிடைத்ததாம்.
தேவேஷ்வருக்கு பத்ம பூஷன்
இந்த நிலையில் 2011 ஜனவரியில், தேவேஷ்வருக்கு சிறந்த சேவைக்கான பத்ம பூஷன் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டதும் கவனிக்கதக்கது.
தேவேஷ்வரை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும்
சிஐஐ தலைவரான விக்ரம் கிர்லோஸ்கர் கூறுகையில், தேவேஷ்வர் சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளுடனான வேலையிலும், அதன் மூலம் அவர் மில்லியன் கணக்கான மக்களுக்கு புதிய வாழ்வாதார வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளார். இதைச் செய்வதன் மூலம் புதிய வழிகளில் தொழில்நுட்பத்தை, விவசாயம் மற்றும் தொழிற்துறையைத் தக்கவைத்துக் கொள்வதற்கான புதிய மாதிரிகளை அவர் அறிமுகப்படுத்தினார். இதுபோன்ற கருத்துகளை அவர் செய்த அனைத்து செயல்களிலும் புகுத்தினார். ஆக இனி ஒவ்வொரும் அதனை பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications