டெல்லி : இந்திய பங்கு சந்தையில் இன்று காலையில் இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ரூ.70.28 ஆக வலுத்திருந்தாலும், கடந்த மாதத்தோடு ஒப்பிடும் போது இந்த ரூபாயின் மதிப்பு மிகப் பெரிய வீழ்ச்சியே.
இதே கடந்த புதன் கிழமையன்று சந்தையின் முடிவில் இந்திய ருபாயின் மதிப்பு 70.34 ரூபாயாக முடிவடைந்திருந்தது. எனினும் இன்று காலையில் 70.28 ரூபாயாக வலுவடைந்திருந்தது.

இதற்கு முக்கிய காரணம் நாட்டில் நிலவி வரும் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் என்கிறது இந்த ஒரு அறிக்கை. இதே வரப்போகும் இந்திய தேர்தல் முடிவுகள் எப்படி இருக்குமோ, புதிய அரசு எவ்வாறு அமையும் என்ற எதிர்பார்பினாலேயே இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.
அதற்கேற்றாற் போல வர்த்தகப் பற்றாக்குறையானது கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமார் $ 15.30 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய மாதத்தில் 10.9 பில்லியன் டாலர்களாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே இதற்கு முந்தைய ஆண்டு இதே காலத்தில் 13.7 பில்லியன் டாலர்களாக இருந்தது.

இதே நாட்டின் ஏற்றுமதி கடந்த ஆண்டை காட்டிலும் 0.6% மட்டுமே அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 26.1 பில்லியன் டாலர்களாக இருப்பது கவனிக்கதக்கது. இதே மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 11% அதிகமாகும்.
இதே இறக்குமதி 4.5% அதிகரித்து 41.4 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இதே கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது 1.4% அதிகமாகும்.
இதுவே இந்திய ரூபாயின் மதிப்பு மட்டும் அல்ல, உலக நாடுகளின் நாணய மதிப்புகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. அமெரிக்கா சீனாவிடையே நிலவி வரும் வர்த்தக போரினால் உலக நாடுகள் அனைத்தும் வீழ்ச்சியடைந்துள்ளன.
குறிப்பாக ஜப்பானின் யென் மதிப்பு 0.07%மும், மலேசிய 0.07%மாகவும், சீனாவின் மதிப்பு 0.08% மாகவும், பிலிப்பைன்ஸ் 0.05% சதவிகிதமும், இதே தாய்வான் டாலரின் மதிப்பு 0.04 சதவிகிதமும், இந்த லிஸ்டில் இந்தியாவில் 0.08 சதவிகிதமும் குறைந்துள்ளது. எனினும் இது இன்னும் சரியலாம் என்றும் பொருளாதார நிபுனர்கள் கூறுகின்றனர். எது எப்படி இருந்தாலும் உள் நாட்டில் நிலவி வரும் குளறுபடிகள் சரியாக வேண்டும் என்றும், அதோடு தேர்தல் முடிவுகள், ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ளவும் குறுகிய கால அளவிலேயே தடை நீக்கப்பட்டுள்ளது.
இதனால் மற்ற நாடுகளையே இந்தியா எதிர்பார்த்துள்ளது. இதனால் நடப்பு கணக்கு பற்றாற்குறை மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிற்து. இது போன்ற பல காரணிகளால் இந்திய ரூபாயின் மதிப்பு இன்னும் சரியவே வாய்ப்பு உள்ளதாகவும் நிபுனர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

கச்சாஎண்ணெய் கையிருப்பு: அமெரிக்கா, சீனா, ஜப்பான் மத்தியில் இந்தியா எங்கே நிற்கிறது?

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications