டெல்லி: அமெரிக்கா ஈரான் இடையே நிலவி வரும் பிரச்சனை காரணமாக, அமெரிக்கா மற்ற நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்க போவதாகவும் கூறி வந்த நிலையில் இந்தியா ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொண்ட நிலையில் தற்போது அதை பயன்படுத்திக் கொள்ள மற்ற நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு முந்தி வருகின்றன.
அட ஆமாங்க சந்துல சிந்து பாட நினைக்கின்றன சில நிறுவனங்கள். கடந்த மாதமே சவுதி அரேபியா ஈரானிடம் இருந்த வாங்கும் கச்சா எண்ணெய்க்கு பதிலாக நாங்கள் தருகிறோம் என்று பேரம் பேசியது அனைவரும் அறிந்த விஷயமே.

இந்த நிலையில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த சவுதி அராம்கோ என்ற நிறுவனத்திடம் கச்சா எண்ணெய் வாங்கப்போவதாகவும், அதுவும் ஜீலை முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் மாதத்திற்கு 2 மில்லியன் பேரல்களாக எண்ணெய் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா கடந்த நவம்பரில் ஈரான் மீது பொருளாதார நடவடிக்கை விதித்தது. அந்த நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட 8 நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்க போவதாகவும் மிரட்டி வந்தது. ஈரானுடன் எந்தெந்த நாடுகள் தொடர்பு வைத்துள்ளனவோ, அதாவது வர்த்தக தொடர்பு வைத்துள்ளனனோ அந்த நாடுகளின் மீது பொருளாதார தடை விதிக்கும் என்று கூறியிருந்தது.
இந்த நிலையில் இந்தியாவும் தற்போது அமெரிக்காவுக்கு இணங்குவது போல் ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை குறைத்துக் கொண்டன. ஏன் தற்போது நிறுத்தியே விட்டன. இந்த நிலையில் சவுதியை சேர்ந்த சவுதி அராம்கோ நிறுவனம் 5.6 மில்லியன் டன் எண்ணெய் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இயக்குனர் ஏ.கே ஷர்மா கூறுகையில், இந்தியாவுக்கு வரும் ஜீலை மாதத்திலிருந்து மாதத்திலிருந்து 2 மில்லியன் பேரல்களை சப்ளை செய்ய சவுதி அராம்கோ ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
தற்போது தான் இந்திய பயனாளர்கள் அப்பாடா என்ற மன நிலை நிலவி வருகிறது. ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்குமோ என்ற பயமே நிலவி வந்த நிலையில், இதனால் பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

இந்த ஏரியாவுல எந்த கப்பல் நுழைஞ்சாலும் தட்டி தூக்குவோம்!! ஈரான் மிரட்டலால் ஸ்தம்பித்த உலக நாடுகள்!!

ஈரான் போரால் இந்திய பொருளாதாரத்திற்கு கெட்ட செய்தி!! நாளைக்கு பெரிய சூறாவளியே இருக்கு!!

ஈரான்-இஸ்ரேல் மோதல்: இந்தியாவுக்கு தான் பெரிய பாதிப்பு.. அடுத்தடுத்து நடக்கும் பாதிப்பு..!!

வரலாறு திரும்புமா? 300% வரை எகிறிய ஆயில் விலை! ஈரான் புரட்சி முதல் லிபிய போர் வரை: விரிவான அலசல்!

அதிரவைக்கும் $10 ஆயில் ஸ்பைக்! மார்ஜின் அழுத்தத்தில் சிக்கப்போகும் நிறுவனங்கள்? எப்படி தப்பிப்பது?

யுத்த பூமியாகும் ஈரான்: கச்சா எண்ணெய் விலையால் இந்தியாவிற்கு ஆபத்தா?

ஏசியன் பெயிண்ட்ஸ் முதல் இண்டிகோ வரை.. சரசரவென சரியும் பங்குகள்! முதலீட்டாளர்கள் தப்பிப்பது எப்படி?

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications