மும்பை : ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியால் தனது நிறுவனத்துக்கு பெரிய பூட்டாய் போட்டு தொங்கவிட்டிருந்த நிலையில், அதை மீண்டும் இயக்க அவசரகால நிதியாக ஜெட் ஏர்வேஸ் எஸ்.பி.ஐ வங்கியை நாடியது.
அந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து நரேஷ் கோயல் ராஜினாமா செய்தால் மட்டுமே அந்த அவசரகால நிதி தரப்படும் என்று வங்கி தரப்பில் கூறப்பட்டது. அந்த நிலையில் தான் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து நரேஷ் கோயல் மற்றும் அவர் மனைவி அனிதா கோயல் இருவருமே, ஜெட் ஏர்வேஸ் இயக்குநர் குழுவில் இருந்து கடந்த மார்ச் 25, 2019 அன்று வெளியேறினர்.

அந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கடன் கொடுத்த வங்கிகளும் மற்றும் நிதி நிறுவனங்களும்அப்போதிலிருந்து இயக்குநர் குழுவை ஆளத் தொடங்கினார்கள்.
இந்த நிலையில் இன்று நரேஷ் கோயலும், அவரது மனைவி அனிதா கோயலும் வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய்க்கு செல்ல திட்டமிட்டனர். இதற்காக, அவர்கள் மும்பை விமான நிலையத்திற்கும் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் அவர்களை வெளிநாடு செல்ல அனுமதிக்க முடியாது என குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர். அதோடு அவர்கள் திருப்பியும் அனுப்பப்பட்டுள்ளனராம். எனினும் ஏன் எதற்கு என்ற தகவல்கள் இதுவரை வெளியாகப்படவில்லை.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கடன் கொடுத்த நிறுவனங்களின் குழு எஸ்.பி.ஐ தலைமையில் அமைக்கபட்டு, இந்த நிறுவனத்தை ஏலம் விட காத்துக் கொண்டிரூகின்றன. இந்த நிலையில் இந்த நிறுவனத்தை வாங்க ஒரு சிலரே முன் வந்துள்ள நிலையில் இதுவரை எந்தவொரு அதிகார பூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முன்னால் இயக்குனர்களான நரேஸ் கோயலுக்கும், அனிதா கோயலுக்கும் அனிதா கோயலுக்கும் வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இது குறித்து எந்தவொரு அதிகார பூர்வ தகவல்களும் வெளியிடப்படாத நிலையில், ஏன் எதற்காக அவர்கள் தடுக்கப்பட்டார்கள் என்பதும் மர்மமாகவே உள்ளது.
எனினும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சுமார் 15,000 கோடி ரூபாய் கடனால் மூடப்பட்டுள்ளது, இந்த நிலையில் ஊழியர்களுக்கு சம்பளமும், எரிபொருள் கட்டணம், லீஸ் பாக்கி, வாடகை கட்டணம் என பலவாறு பல இன்னல்களை சந்தித்த பிறகே கடந்த ஏப்ரல் 17 அன்று இந்த மூடுவிழாவை சந்தித்தது.
என்ற நிலையில் இந்த மூடு விழாவை கண்டித்து இதுவரை, ஜெட் ஏர்வேஸ் விஷயத்தில் சிபிஐயிலும் இதுவரை எந்த வழக்கையும் பதிவு செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு இந்த தீவிர நடவடிக்கைக்கு சட்ட அமலாக்க நிறுவனம் தொடர்ந்தும் இன்னும் தெளிவானதொரு தகவலும் தெரிவிக்கவில்லை. ஆக மொத்தம் எதோ ஒன்று நடக்கிறது என்று மட்டும் புரிகிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications