விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லண்டன் : விஜய் மல்லையா ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உட்பட பல வங்கிகளிடம் இருந்து கடனை வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கே தப்பி ஓடிவிட்டார். இந்த நிலையில் லண்டனிலும் அவருக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம். இனி எந்த நாட்டுக்கு செல்வார் என்று தான் தெரியவில்லை.

எனினும் ஒருபுறம் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர இங்கிலாந்து அரசோடு சட்ட ரீதியில் பேச்சு வார்த்தைகளும் நீதிமன்றங்களில் வழக்குகளும் நடந்து வருகின்றன. இவைகளை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் விடுங்க..

விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா

தற்போது விஜய் மல்லையாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை இங்கிலாந்தின் உயர் நீதிமன்றம், பிரிட்டனின் மதுபான நிறுவனமான டியாகோவுக்கு (Diageo) செலுத்த வேண்டிய 135 மில்லியன் டாலர்களையும், அதோடு சட்ட ரீதியான செலவுகள் மற்றும் வட்டி+ அசலும், அதோடு நேரடியாக வாங்கிய 40 மில்லியன் டாலர்களையும் சேர்த்து மொத்த தொகையாக $175 மில்லியன் டாலர்களை அடுத்த 28 நாட்களுக்குள் செலுத்த உத்தரவிட்டுள்ளதாம் லண்டன் உயர்நீதி மன்றம்.

அதோடு இந்த $175 மில்லியன் டாலர்களை டியாகோவுக்கு பதிலாக ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கிக்கு திருப்பிச் செலுத்த வேண்டும என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாம்.

குறைந்து வரும் கல்விக்கடன்கள்.. வாராக்கடன் அதிகரிப்பால் கல்விக்கடன் அளிக்க தயங்கும் வங்கிகள் குறைந்து வரும் கல்விக்கடன்கள்.. வாராக்கடன் அதிகரிப்பால் கல்விக்கடன் அளிக்க தயங்கும் வங்கிகள்

இது குறித்து பிரிட்டனின் மதுபான நிறுவனமான டியாகோ கூறுகையில், மல்லையாவும் அவர் சம்பந்தப்பட்ட சில நிறுவனங்களுக்கு நாங்கள் சுமார் $175 மில்லியன் டாலர்களை கடனாக கொடுத்துள்ளோம். ஆக மல்லையாவும் அவரது நிறுவனங்களும் எங்களது நிறுவனத்துக்கு கடனை திரும்ப செலுத்துவற்கு கடமை பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளதாம்.

Diageo Plc, Diageo Holdings Netherlands BV (DHN) and Diageo Finance Plc உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள், 63 வயதான விஜய் மல்லையாவுடன் கடந்த 2016ல் ஒப்பந்தம் செய்துள்ளனவாம். இதன் மூலமே விஜய் மல்லையா வசமாக சிக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிதி மோசடி செய்தவர்களுக்கு எதிரான இந்தப் புதிய சட்டத்தினை அடுத்து, விஜய் மல்லையா இந்தியாவில் பொருளாதார குற்றவாளி என்று தீர்ப்பளிப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும். இந்த நிலையில் லண்டனிலும் விஜய் மல்லையாவுக்கு லண்டனிலும் நெருக்கடி நிலையே நிலவி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vijay Mallya to Repay $135 Million Loan

The UK High Court on Friday ordered Vijay Mallya to pay in full $135 million to Diageo. Also want pay the full amount within 28 days.
Story first published: Sunday, May 26, 2019, 11:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X