சான்பிரான்சிஸ்கோ : உலகப் புகழ்பெற்ற உலகின் மிகப் பெரிய பணக்காரரும், பங்கு சந்தையின் தந்தை என்று அழைக்கப்படும் வாரன் பஃபெட்டுடன் (Warreb Buffet) உடன் ஒருவேளை மதிய உணவருந்துவதற்கு, ஏலம் விடுவது தொடங்கியுள்ளதாம். இந்த ஏலத்தொகை மூலம் யார் தன்னுடன் உணவருந்த போகிறார்கள் என தீர்மானிக்க உள்ளராம் வாரன்.
சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஏழைகள் மற்றும் வீடு அற்றவர்களுக்காக இயங்கி வரும் (Glide) கிளைட் என்ற தொண்டு நிறுவனத்திற்கு உதவும் பொருட்டு ஆண்டு தோறும் வாரன் பஃபெட் இந்த ஏலத்தை நடத்தி வருகிறார். இந்த ஏலம் கடந்த ஞாயிற்கு கிழமை தொடங்கப்பட்டுள்ளதாம்.
இதுவரை இந்த தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 19 வருடங்களாக பணியாற்றி வருகிறாம். இதன் மூலம் 30 மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளராம்.
இது குறித்து வாரன் அந்த தொண்டு நிறுவனம் கூறுகையில், தொழில்நுட்ப வளாகங்கள் நிறைந்த சான்பிரான்சிஸ்கோவிலுள்ள, சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள மக்களின், வாழ்க்கை தரத்தினை உயர்த்துவது மற்றும் வீடு இல்லாமல் இருப்பவர்கள் உணவு வழங்குதல், பல மன நிலை சரியில்லாதவர்களுக்கு சிகிச்சைக்காக பங்களிப்பு செய்தல், அதோடு சுமார் 8,000 மக்கள் வீடு இல்லாமல் தெருக்களில் இருப்பதாகவும், அவர்களுக்கு உதவுவதற்காகவே இப்படியொரு ஏலத்தினை நடத்தி வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் இதன் மூலம் வரும் வருமானத்தினை வருடா வருடம் க்ளைட் தொண்டு நிறுவனத்திற்கு வாரன் தருகிறார் என்று கூறுகிறார். அந்த தொண்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கரேன் ஹன்ரஹான்.
அதோடு ஒரு புறம் மாட மாளிகைகள் அமைந்திருந்தாலும், மறுபுறம் வீடு இல்லாமல் தெருக்களில் வசித்து வருகின்றனர். இது நாட்டில் ஒரு சம்த்துவமின்மையை காட்டுகிறது. அதோடு சிலர் கூறுகிறார்கள் நாளுக்கு நாள் பொருளாதாரம் மேன்மை அடைந்து வருகிறது என்று. ஆனா உண்மை என்னவெனில் மக்களின் பொருளாதாரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. வீடு, உணவு, மற்றும் பிற தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இதுவே உண்மை என்கிறார் கரேன்.