டெல்லி : தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது, ஆப்பிரிக்கா யூனிட்டின் மூலம் லண்டன் பங்கு சந்தையில் பங்கு வெளியிட முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 16 பில்லியன் டாலருக்கும் அதிகமான கடனை கட்ட முடியும் என்றும் ஏர்டெல் ஆப்பிரிக்கா லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே, அதாவது ஜியோ நிறுவனம் எப்போது தொலைத்தொடர்பு துறையில் காலடி எடுத்து வைத்ததோ அன்றிலிருந்தே மற்ற நிறுவனங்களுக்கு ஏழரைச் சனி ஆரம்பித்தது. அட ஆமாப்பு 2016லிருந்து ஜியோ வந்ததிலிருந்தே ஏர்டெல் உள்ளிட்ட பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வெகுவாக பதிக்கப்பட்டன.

குறிப்பாக மிகக் குறைந்த விலையில் டேட்டா கார்டுகள் மற்றும் மலிவான விலையில் கால்கள் பேக்குகள், ஏன் ஒரு கட்டத்தில் இலவச சலுகைகளை அறிவித்தது. இந்த நிலையில் சில இந்திய தொலைத்தொடர்பு காணாமல் போய்விட்டன.
அதில் மிஞ்சியது தான் ஏர்டெல் மற்றும் வோடபோன். தற்போது இந்த இரு நிறுவனங்களுமே மிகுந்த கடன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்து வந்தது. இதனால் பார்தி ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே உரிமைப்பங்கு வெளியீட்டின் மூலம் 25,000 கோடி ரூபாயை திரட்டவும் முடிவு செய்திருந்தது.
இந்த நிலையில் ஆப்பிரிக்க யூனிட் தான் நல்ல லாபத்தைக் கொடுத்தது என்றும், அதன் மூலம் தான் பார்தி ஏர்டெல் நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் நஷ்டத்தை கண்டிருந்தாலும் ஆப்பிரிக்கா யூனிட் மூலம் சற்று லாபம் கண்டதால் சற்று ஆறுதல் அடைந்த்ததாகவும் கூறியிருந்தது.
இந்த நிலையில் தற்போது பங்கு வெளியீட்டின் மூலம் நிதி திரட்டி கடனை குறைக்க முடிவு செய்துள்ளது ஏர்டெல் நிறுவனம். குறிப்பாக தொடர்பு சேவையில் நைஜீரியா, கென்யா மற்றும் டான்ஜானியா உள்ளிட்ட 14 நாடுகளில் ஏறக்குறைய 100 மில்லியன் சந்தாதாரர்கள் கொண்ட ஜோஹன்னஸ்பர்க்-சார்ந்த எம்டிஎன் குழு லிமிடெட் பின்னால், ஏர்டெல் இரண்டாவது இடத்தில் தற்போது உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இந்த நிறுவனத்தின் சுனில் மிட்டல் கூறுகையில், பார்தி ஏர்டெல் நிறுவனம் ஜியோ நிறுவனம் ஆரம்பித்தலிருந்தே சுருங்க தொடங்கியது. அதோடு ஜியோவின் சலுகைகளால் மிக நஷ்டமடைந்தது. இந்த நிலையில் இந்த பங்கு வெளியீட்டின் மூலம் இந்த கடன் களைக் அடைக்க முடியும் என்றும், இதோடு இன்னும் நிறுவனத்தை வழி நடத்திச் செல்ல இந்த பங்கு வெளியீடு ஏதுவாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications