டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததும் தடாலடியாக பல முடிவுகளை தற்போது எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறு வியாபாரிகளுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்துக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுள்ளது.
எப்பவும் சொல்ற திட்டம் தானா என்று நினைக்காதீங்க பாஸ்? இந்த புதிய பென்சன் திட்டத்தில் சிறிய கடைக்காரர்கள், மற்றும் சிறு வியாபாரிகள் அதோடு கிரானா ஸ்டோர் வைத்திருப்போருக்கு குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக மாதம் ரூ.3000 அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டும் இல்லையாம் இந்த புதிய திட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் உலகளாவிய சமூக பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாம். அதோடு இந்த திட்டம் 60 வயதை தொட்டவர்களுக்கு தான் பொருந்துமாம். ஆக மொத்தம் இந்த புதிய பென்சன் திட்டத்தின் கீழ் 3 கோடி வர்த்தகர்கள் பயன் அடைவார்களாம்.
அதோடு சிறு கடைக்காரர்களும், சுயதொழில் முனைவோரும், 1.5 கோடி ரூபாய்க்கு கீழ் ஜி.எஸ்.டி வினியோகம் கொண்ட சில்லறை வணிகர்களும் இந்த திட்டத்தில் பயன் பெறலாமாம், ஆனால் அவர்கள் 18 - 40 வயதுடையோர்களாக இருக்க வேண்டும் என்பது தான் டிவிஸ்டே.
அதோடு இந்த பென்சன் திட்டத்தினை பெற குறைந்த பட்ச ஆவணங்கள் இருந்தால் போதுமாம். ஆமாப்பு இந்த திட்டத்தில் இணைபவரின் ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு விவரம் இருந்தாலே போதுமானாதாம்.
அதோடு இந்த திட்டத்தினை நாடு முழுவதிலும் உள்ள 3.25 லட்சங்கள் பொது சேவை மையங்கள் மூலம், இந்த பென்சன் திட்டத்திற்காக பதிவு செய்து கொள்ளலாமாம்.
இது பென்சன் திட்டம் குறித்து, அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பின் செயலாளர் பிரவீன் காந்தெல்வால் கூறுகையில், இந்த பென்சன் திட்டம் வர்த்தகர்களின் நீண்ட நாளைய கோரிக்கையாக இருந்து வந்தது. அது தற்போதுதான் நடைமுறைக்கு வந்துள்ளது, இது வர்த்தகர்களுக்கு மிக மகிழ்ச்சியை கொடுத்துள்ளது எனவும் கூறியுள்ளாராம்.
அதோடு தற்போது இன்னொரு புதிய தன்னார்வ பென்சன் திட்டத்தினை வகுத்திருப்பதாகவும், இத்திட்டத்தில் 50 : 50 என தன்னார்வா ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயனாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட வயதுடைய குறிப்பிட்ட பங்களிப்பும் மற்றும் மத்திய அரசாங்கத்தின் பொருத்தமான பங்களிப்புகளும் உள்ளனவாம்.
சரி அது என்ன தன்னார்வ பெண்ட்சன் திட்டம்ன்னு சொல்றீங்களா? இப்ப நீங்கள் 50 : 50 தன்னார்வ திட்டத்தில் சேருகிறீர்கள் என்றால், உதாரணத்துக்கு மாதம் நீங்கள் 100 ரூபாய் செலுத்துகிறீர்கள் என்றால், அரசு அதன் தரப்பிலிருந்து 100 ரூபாய் செலுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 5 கோடி வர்த்தகர்கள் இணைவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளாராம். நல்ல விஷயம் தானேப்பு நடக்கட்டும்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications