டெல்லி : நீங்கள் அதிகளவில் வரி செலுத்துபவரா? அப்படின்னா விரைவில் பிரதமர் நரேந்திர மோடியுடனோ அல்லது நமது புதிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடனோ டீ விருந்தில் கலந்து கொள்ளாலாமாம்.
நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு 2.0 அரசு இரண்டாவது முறையாக தலைமையேற்றதிலிருந்து பல அதிரடியான தகவல்கள் வெளியாகி வண்ணமே உள்ளன.

அதன் ஒரு பகுதியாக அதிக வருமான வரி செலுத்துபவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், அதே சமயம் அதிக வருமான ஈட்டி வரி செலுத்துவதை அதிகரிக்க என்ன செய்வது என்பது குறித்து விவாதிக்கவும், பிரதமர் நரேந்திர மோடியுடனோ அல்லது நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடனோ தேநீர் விருந்தில் கலந்து கொள்ளலாம் என்று செய்திகள் பரவலாக வெளியாகி வருகின்றன.
இதில் குறிப்பாக சென்ற ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்த போது முறையாக கணக்கு காண்பித்து வரி செலுத்தியவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பினை அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக அரசுக்கு தொடர்ந்து வரியை ஒழுங்காக செலுத்தி வருபவர்களுக்கு மத்திய அரசு சான்றிதழ் வழங்கி வந்தது. எனினும், இதற்கான அறிவிப்பை பட்ஜெட் தாக்கலின் போது மோடி 2.0 அரசு, புதியதாக நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ள நிர்மலா சீதாராமன் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டம் ஒரு வகையில் வருமான வரித்துறையினரையும் ஊக்கப்படுத்தும் என்றும், அதிக வரி செலுத்துவோருக்கும் இது ஊக்கப்படுத்தும் விதமாகவும் இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் நேரடி வரி வசூல் 12லட்சம் கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை சம்பாதிக்கும் தனி நபர்களுக்கு 10 சதவிகித கூடுதல் கட்டணமும், இதுவே ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் பெறுபவர்கள், 15 சதவிகித வரியை அதிகமாக சம்பாதிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் வர்த்தகத்தில் ரூ.1 கோடிக்கும் மேல் வருமானத்தை அதிகரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்காலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதியதாக நிதியமைச்சராக பதவியேற்றுள்ள நிர்மலா சீத்தாராமன் ஜீலை5ல், 2019 - 2020க்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மோடி 2.0 அரசின் முதல் முழு பட்ஜெட் என்பது கவனிக்கதக்கது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications