வாங்குன கடன திருப்பித் தரலைங்க, அதான் அவன் பொண்ண கொன்னுட்டேன்! அரண்டு போன அலிகார்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அலிகார்: பீஃப் சாப்பிட்டாலோ அல்லது பீஃப் என்கிற பெயரை உச்சரித்தால் கூட "போட்றா அவன" என ஹிந்துத்வ தீவிரவாதிகள் இருக்கும் உத்திரப் பிரதேச மாநிலத்தில், பீஃப் சாப்பிட்டார்கள் என்பதற்காக இறந்த முகம்மது அக்லஃப் இறந்த அதே மாநிலத்தில் தற்போது இன்னொரு கொடூர சம்பவம் நடந்திருக்கிறது.

 

பூட்டுகளுக்கு பெயர் போன அலிகார் மாவட்டத்தில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள, தப்பல் (Tappal) கிராமத்தில் அந்தக் கொடூரம் கோரமாக நடந்திருக்கிறது.

வாங்கிய 10,000 ரூபாய் கடனைத் திருப்பிக் கொடுக்கவில்லை என, கடன் வாங்கியவரின் 2.5 வயது குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொன்றிருக்கிறார்கள் கடன் கொடுத்த காட்டு மிராண்டிகள்.

என்ன பிரச்னை

என்ன பிரச்னை

ஒரு அழகிய குடும்பம். அந்த குடும்பத்துக்கு மேலும் அழகு சேர்க்க ஒரு குட்டி இளவரசியாக ஒரு 2.5 வயது பெண் குழந்தை. மிக அளவான சம்பாத்தியம், சின்ன வேலை, செல்லக் குழந்தை என சிறிய உலகத்தில் வாழும் குடும்பம். இந்த குடும்பத்துக்கு ஏதோ ஒரு அவசர தேவைக்காக பக்கத்து வீட்டுக் காரர்களான சஹித் மற்றும் அஸ்லாமிடம் 10,000 ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார்கள்.

அப்புறம் தருகிறேன்

அப்புறம் தருகிறேன்

சரி ஏதோ அவசரத்தில் கேட்கிறார்கள் என்பதால் சஹித்தும் அஸ்லமும் எப்போது திருப்பிக் கொடுப்பீர்கள் எனக் கேட்காமலேயே கடனைக் கொடுத்துவிட்டார்கள். சில வாரங்கள் கழிந்து விட்டது. "என்னய்யா வாங்குன 10,000 ரூபாய் கடன எப்பய்யா தருவே" என சஹித்தும் அஸ்லாமும் வேறு தொனியில் கேட்டிருக்கிறார்கள். கடன் வாங்கிய குடும்பமும் விரைவில் கொடுத்து விடுகிறேன் எனச் சொல்லி இருக்கிறார்கள்.

கொடுக்கவில்லை
 

கொடுக்கவில்லை

இன்னும் சில வாரங்கள் கழிந்துவிட்டது. இந்த முறை இன்னும் கோபத்துடனும், மரியாதை குறைவாகவும், “ஏய்யா கடன் வாங்குறப்ப நல்லா இருந்துச்சுல்ல, இப்ப கடன எப்ப குடுப்ப” என மிரட்டல் தொனிலேயே கேட்டிருக்கிறார்கள். கொஞ்சம் போகட்டும் திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என நம் அப்பாவிக் குடும்பம் வழக்கம் போல பதில் சொல்லி இருக்கிறது.

அடிதடி

அடிதடி

ஒரு நாள் மீண்டும் சஹித்தும் அஸ்லமும் வெளிப்படையாக வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கிறாயா இல்லை உன் குழந்தையை தூக்கட்டுமா எனவும் மிரட்டி இருக்கிறார்கள். பயந்து போன அந்த ஏழைக் குடும்பம், காலில் விழாத குறையாக அடித்துப் பிடித்து சஹித்துக்கும், அஸ்லாமுக்கும் பல விதங்களில் சமாதானம் சொல்லி திருப்பி அனுப்பி இருக்கிறார்கள். 

கோபம்

கோபம்

ஆனால் சஹித்துக்கும் அஸ்லாமுக்கும் கோபம் தாளவில்லை. ஏற்கனவே அந்த அப்பாவிக் குடும்பத்தில் மிரட்டியது போலவே, மே 31, 2019 அன்று குழந்தையைக் கடத்தி இருக்கிறார்கள். கடத்திய குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொன்றே விட்டார்கள். கோபம் அடங்காமல் கண்களையும் நோண்டி எடுத்திருப்பதாகச் சில செய்திகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதன் பின் தான் அவர்கள் செய்தது கொலை என்கிற பெரிய தவறு அவர்களுக்குப் புரிய வருகிறது.

அடையாளம் தெரியக் கூடாது

அடையாளம் தெரியக் கூடாது

ஆக தவறை மறைக்க அந்த 2.5 வயது பிஞ்சுக் குழந்தையை அடையாளம் தெரியாத அளவுக்கு கண்டம் துண்டமாக வெட்டி குப்பைத் தொட்டியில் வீசி இருக்கிறார்கள். குழந்தையின் உடல் அங்கங்களை தெரு நாய்கள் வாயில் கவ்விக் கொண்டு எடுத்துச் செல்வதைப் பார்த்த காவல் துறையினர் சந்தேகப்பட்டு குப்பைத் தொட்டியைத் தோண்டித் துருவி இருக்கிறார்கள். குழந்தையின் சடலம் கடந்த ஜூன் 02, 2019 அன்று தான் கிடைக்கிறது.

காவல் துறை

காவல் துறை

விசாரணையில் கடன் பிரச்னை தெரிய வர சஹித் மற்றும் அஸ்லாமை கைது செய்து, தேசிய பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து மேற்படி விசாரணைகளை நடத்தி வருவதாக அலிகார் மாவட்ட மூத்த காவல் துறை கண்காணிப்பாளர் ஆகாஷ் பத்திரிகையாளர்களிடம் சொல்லி இருக்கிறார். வழக்கை, விரைவு நீதிமன்றம் விசாரிக்கப் போகிறதாம்.

உண்ணாவிரதம்

உண்ணாவிரதம்

தன் 2.5 வயது மகளின் மரணச் செய்தி கேட்ட தகப்பன் “சஹீத் மற்றும் அஸ்லாமின் மொத்த குடும்பத்தையும் சிறையில் அடைக்க வேண்டும். அவர்கள் உதவி இல்லாமல் இந்த இருவரால் மட்டும் என் குழந்தையைக் கொன்று இருக்க முடியாது. அப்படி கைது செய்யவில்லை என்றால், சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்” எனச் சொல்லிகாவல் துறைக்கு பகீர் கிளப்பி இருக்கிறார்.

நடவடிக்கை

நடவடிக்கை

மேற்படி எந்த பிரச்னையும் நடக்காமல் இருக்க, 2.5 வயது மகளைப் பறி கொடுத்த குடும்பத்தினருக்கும், தப்பல் கிராமம் சுற்றிலும் காவல் துறையினர் தயார் நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதை ஒரு முன்னேற்பாடாக காவல் துறையினர் செய்திருப்பதாகவும் அலிகார் மாவட்டத்தின் மூத்த காவல் துறை கண்காணிப்பாளர் சொய்திருப்பதாகவும் காவல் துறை வட்டாரங்களில் இருந்து சொல்கிறார்கள்.

இந்து - முஸ்லிம்

இந்து - முஸ்லிம்

செய்திகள் ஒரு பக்கம் இப்படி வந்து கொண்டிருக்க, இறந்த 2.5 வயது செல்ல மகளின் பெயர் ட்விங்கில் ஷர்மா என்றும், அந்தச் சிறுமியை முகம்மது சஹித் பாலியல் வன் கொடுமைக்கு ஆள் ஆக்கி கொலை செய்துவிட்டான் என்றும் பல ட்விட்கள் பறந்து கொண்டிருக்கின்றன. இப்போது வரை இறந்த 2.5 வயது மகளின் பெயர், அவர்களின் பெற்றோர் விவரங்களை அலிகார் காவல் துறை கண்காணிப்பாளர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

zahid and aslam killed a 3 year old child for not paying 10000 rupees loan taken by his father

zahid and aslam killed a 3 year old child for not paying 10000 rupees loan taken by his father
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X