டெல்லி: இந்தியாவின் மத்திய பயணிகள் விமான போக்குவரத்து அமைச்சகம், வரும் ஜூலை முதல் விமானப் பயணிகளிடம், விமான பயணச் சீட்டுக் கட்டணத்துடன் 150 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப் போகிறார்களாம்.
காரணம் CISF - Central Industrial Security Force ஜவான்கள் தானாம். இந்தியாவின் முக்கியமான 61 விமான நிலையங்களை இந்த மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையினர் தான் பாதுகாத்து வருகிறார்கள். இந்த வீரர்களுக்கான சம்பளச் சுமையும் மத்திய அரசின் பயணிகள் விமான சேவை அமைச்சகத்தின் பொறுப்பில் தான் இருக்கிறதாம்.

தற்போது மார்ச் 2019 வரை மட்டும் சுமார் 600 கோடி ரூபாய் இந்த மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியாம். இந்த சம்பள பாக்கியைக் கொடுக்க முடியாததால் தான் இப்போது பயணிகள் தலையில் கூடுதல் கட்டணத்தை வசூலித்து சம்பளத்தைக் கொடுக்கப் போகிறார்களாம்.
இதற்கு முன் இந்திய பயணிகளுக்கு பாதுகாப்புக் கட்டணமாக 130 ரூபாய் வசூலித்து வந்தார்கள். ஆனால் இப்போது 20 ரூபாய் உயர்த்தி, 150 ரூபாய் வசூலிக்க இருக்கிறார்கள். அதே போல சர்வதேச பயணிகளுக்கு பாதுகாப்புக் கட்டணமாக 3.25 அமெரிக்க டாலர் வசூலித்து வந்தார்கள். அதை வரும் ஜூலை 01, 2019-ம் தேதியில் இருந்து 4.85 அமெரிக்க டாலராக வசூலிக்கப் போகிறார்கள்.
2001-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த போது தான், இந்த விமான பயணச் சீட்டுக் கட்டணத்தோடு, பாதுகாப்புக் கட்டணமாக 130 ரூபாய் வசூலிக்கத் தொடங்கினார்களாம். அதை இப்போது 2019-ம் ஆண்டில், மீண்டும் மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்து தான் 150 ரூபாயாக உயர்த்தி இருக்கிறார்களாம்.
இதற்கு மத்தியில் இடைப்பட்ட 18 வருடங்களில் ஒரு முறை கூட பயணிகளிடம் பாதுகாப்புக் கட்டணத்தை உயர்த்தவே இல்லையாம். இந்த அறிவிப்பு வரும் ஜூலை 01, 2019 காலை 12.01 மணியில் இருந்து புறப்படும் விமானங்களில், விமான பயணச் சீட்டுகளுடன் பாதுகாப்புக் கட்டணமாக 150 ரூபாய் வசூலிக்கத் தொடங்குவார்கள் என மத்திய பயணிகள் விமானப் போக்குவரத்து அமைச்சகம் சொல்லி இருக்கிறார்கள்.
ஏற்கனவே இந்திய விமானப் பயணிகளுக்கு போதிய விமானங்கள் இல்லை. அப்படியே விமானங்கள் கிடைத்தாலும், அதிக விலை கொடுத்து பயணச் சீட்டுகளை வாங்க வேண்டி இருக்கிறது. அதோடு இப்போது இந்த கூடுதல் பாதுகாப்புக் கட்டணம் வேறு செலுத்த வேண்டும் என்றால் எப்படி..?
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications