லண்டன் : லண்டனில் போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசுபாட்டை குறைப்பதற்காக கடந்த 2003ம் ஆண்டு முதல் நெரிசல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம். ஆமாங்க இந்த நெரிசல் கட்டணமானது 1961ல் தூதரக உறவுகள் தொடர்பான வியன்னா மாநாட்டில் உருவாக்கப்பட்டதாம்.
இந்த திட்டத்தால் கனரக வாகனங்கள் மாற்று வழியில் பயணம் செய்யவேண்டுமாம். அதோடு இங்கு கூட்ட நெரிசலும் குறையுமாம். போக்குவரத்து நெரிசல் கட்டணம் அமல்படுத்தப்பட்டுள்ள சாலைகளில் பேட்டரி வாகனங்கள், குறைவான புகையை வெளிப்படுத்தும் சிறிய வகை வாகனங்கள் இலவசமாக செல்லலாம் என்ற விதி முறையும் உள்ளதாம்.
ஆமாங்க.. இந்த வகையில் பல நாடுகள் லண்டனுக்கு கடன் பட்டுள்ளதாம். இந்த லிஸ்டிலயும் அமெரிக்கா தான் டாப்பாம். சுமார் 12.5 மில்லியன் பவுண்டுகள் கடன் வத்துள்தாம், இந்திய மதிப்பில் ரூ.110 கோடியாம். அதோடு ஜப்பான் 8.6 மில்லியன் பவுண்டுகளோட இரண்டாவது இடத்திலும் (ரூ.76 கோடி), நைஜீரியா 7.1 மில்லியன் பவுண்டுகளும் (ரூ.63 கோடி), இந்தியா 6.1 மில்லியன் பவுண்டுகளும் (ரூ.55 கோடியும் ) கடன் வைத்துள்ளனவாம்.
அதோடு அதிகளவு புகையை வெளியிடும் கனரக வாகனங்கள் மற்றும் பழைய வாகனங்கள் இந்த சாலையின் வழியாகக் சென்றால், நெரிசல் கட்டணமாக 11.50 யுரோக்கள் (ரூ.1016) செலுத்த வேண்டுமாம். தவறும் பட்சத்தில் அபராத தொகையாக 160 யுரோக்கள் (ரூ.14140) செலுத்த வேண்டுமாம். இந்த கட்டணத்தை செலுத்தவில்லை எனில் கண்காணிப்பு காமிராக்களின் மூலம் வாகனத்தை கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கையும் எடுக்கப்படுமாம்.
அவ்வகையில், லண்டன் போக்குவரத்து துறைக்கு நெரிசல் கட்டணம் செலுத்த வேண்டிய கடன் பட்டியலில் இந்திய தூதரகம் 4வது இடத்தில் உள்ளது என அந்த நாட்டு அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதோடு, இந்த அபராத தொகையை வசூலிப்பதற்காக லண்டன் போக்குவரத்து துறை, ஐ.நா சர்வதேச நீதிமன்றத்தை நாட உள்ளதாம். அதோடு இதுபற்றி லண்டன் போக்குவரத்து துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இது வரி அல்ல, சேவைக்கட்டணம் ஆகும். எனவே வெளியுறவு தூதரகங்கள் வரி செலுத்தாமல் இருக்க இயலாது. மேலும் செலுத்தாத அனைத்து கட்டணங்களையும் கருத்தில் கொண்டு அதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம்" என்றும் கூறியுள்ளாராம் எச்சரித்துள்ளராம்.