டெல்லி : ரிலையன்ஸ் குழுமத்தின் மீதான நம்பிக்கை குறையத் தொடங்கியதன் விளைவாக ரிலையன்ஸ் குழும பங்குகளின் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து சரிய தொடங்கியுள்ளனவாம், இதனால் பயந்து போன அனில் அம்பானி, யாரும் பயப்பட வேண்டாம் என்றும், கடந்த 14 மாத்தில் மட்டும் ரூ.35,000 கோடி கடன் மதிப்பை திருப்பி அளித்துள்ளதாகவும் அறிவித்துள்ளாராம் அனில் அம்பானி.
இன்று பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பேசிய அனில் அம்பானி, நிதி நிறுவனங்களில் இருந்து நிதி வழங்கும் நிலை மிக மோசமாக இருந்தாலும் கூட, ரிலையன்ஸ் குழுமம் இதுவரை அசல் தொகையில் ரூ.24,800 கோடியும், வட்டியாக 10,600 கோடி ரூபாயும் செலுத்தி உள்ளதாம்.

கடந்த சில வாராங்களாக ரிலையன்ஸ் குழும நிறுவனத்தின் பங்குகள் பற்றிய தேவையில்லாத வதந்திகள் பரவி வருவதாகவும், அதோடு மோசமான யூகங்களும் நிலவி வருவதாகவும் அனில் அம்பானி கூறியுள்ளார்.
இந்த நிலையில் ரிலையன்ஸ் குழும பங்கு தாரர்களுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரிலையன்ஸ் கேப்பிட்டல், ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் இன்ஃப்ரா இதோடு சம்பந்த துறைகளின் கடன் தொகை ரூ.35,000 கோடியாம்.
இது குறித்து கூறிய அனில் அம்பானி எதிர்கால கடமைகளை நிறைவேற்றுவதற்காக, கடனை கட்டுவதற்காக பல திட்டங்கள் தீட்டியுள்ளதாகவும், இதன் மூலம் முதலீட்டாளர்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.
அதோடு இந்த விவகாரங்களை ஒருங்கினைக்கும் வகையில் ஒழுங்கு முறை ஆணையமோ நீதிமன்றங்களோ எந்த ஒரு இறுதி தீர்ப்பையும் வழங்கவில்லை.
இந்த நிலையில் எந்தவொரு மோசமான நிதி நெருக்கடியிலும், மிகவும் சவாலான சூழ்நிலையிலும் கூட ரிலையன்ஸ் குழுமம் ரூ,35,000 பணத்தை செலுத்தியுள்ளது. அதுவும் வங்கிகளிலோ, பரஸ்பர நிதி நிறுவனங்களிலோ, வங்கிகளோ அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிலோ கடனை வழங்காத நிலையிலும் இந்த கடனை திரும்ப கட்டியுள்ளது.
இந்த நிலையில் ரிலையன்ஸ் குழுமம் தனித்து நின்று இதனை செய்துள்ளது. எனக்கு நம்பிக்கை உள்ளது இந்த கடன் பிரச்சனையை முடித்து, பங்கு தாரர்களுக்கு லாபகரமான உயர்ந்த வருமானம் உடைய பங்குகளாக ரிலையன்ஸ் மாறும் என்றும் அனில் நம்பிக்கை தெரிவித்துள்ளராம். நம்பிக்கை பலிக்கட்டும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications