உன் காதலி கூட இல்லன்னா.. விமானத்த கடத்துவியா.. ரூ.5 கோடி எடு ஜெயிலுக்கு போ.. விரட்டிய ஜட்ஜ்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அகமதாபாத் : மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் பிர்ஜூ சல்லா என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ம் தேதி, ஜெட் ஏர்வேஸ் விமானத்தை கடத்தவுள்ளதாக விமானநிலையத்தின் கழிவறையிலுள்ள டிஸ்யூ பேப்பரில் எழுதி வைத்தார்.

ஆமாங்க.. மும்பை - டெல்லி செல்லும் விமானமான, 9W339 என்ற எண்ணுடைய அந்த விமானத்தில் தான் அந்த துரதிஷ்டவசமான இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதுவும் அந்த விமானத்தில் வணிக வகுப்பு அருகில் உள்ள கழிவறையில் தான் இந்த செய்தியை எழுதி வைத்துள்ளார் பிர்ஜூ சல்லா.

உன் காதலி  கூட இல்லன்னா.. விமானத்த கடத்துவியா.. ரூ.5 கோடி எடு ஜெயிலுக்கு போ.. விரட்டிய ஜட்ஜ்

இதையடுத்து மும்பை - டெல்லி செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தை தான் கடத்தவுள்ளதாக ஆங்கிலம் மற்றும் உருதுவில் எழுதியிருந்தாராம்.

தொழிலதிபர் பிர்ஜு சல்லா எழுதிய இந்த மிரட்டலால், அந்த விமானம் அவசரமாக அகமதாபாத் விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர், பிர்ஜூ சல்லா அங்கு கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து முதன்முறையாக விமானத்தில் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நபர் பட்டியலில் பிர்ஜூ சல்லா சேர்க்கப்பட்டார். மேலும், விமானக் கடத்தலுக்கு எதிரான சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டது.

பிர்ஜூ சல்லாவிடம் நடந்த விசாரணையில், விமானத்தை கடத்துவதாக மிரட்டல் விடுத்ததை ஒப்புக் கொண்டார். மேலும் அவர் அளித்த வாக்குமூலத்தில், இந்த மிரட்டலின் காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் டெல்லியில் செயல்படும் அலுவலகத்தை மூடிவிடும். அதனை மூடிவிட்டால் டெல்லியில் பணியாற்றும் தனது காதலி மும்பை திரும்பிவிடுவார் என்று நம்பினேன் கூலாக பதில் கூறியிருந்திருக்கிறார்.

அதோடு ஜெட் ஏர்வேஸ் விமானத்தை ஹைஜேக் செய்வேன் என்று மிரட்டிய இந்த தொழிலதிபருக்கு சிறப்பு தேசிய புலனாய்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. அதுமட்டும் அல்ல 5 கோடி ரூபாய் அபராதமும் தண்டனையாக விதித்து தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்ரம்ப் சார் தில்லிருந்தா மேல கை வைங்க பாக்கலாம்! இறக்குமதி வரி உயர்வு மிரட்டலுக்கு சீனா பதில்..! ட்ரம்ப் சார் தில்லிருந்தா மேல கை வைங்க பாக்கலாம்! இறக்குமதி வரி உயர்வு மிரட்டலுக்கு சீனா பதில்..!

அதோடு இந்த வழக்கை விசாரித்த சிறப்பு தேசிய புலனாய்வு நீதிமன்றத்தின் நீதிபதி கே.எம் டேவ், இந்த அபராதத் தொகையை கடத்தப்படுவதாக மிரட்டல் விடுக்கப்பட்ட விமானத்தில் பயணித்தவர்களுக்கு பிரித்து அளிக்கவேண்டும் என்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளராம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mumbai Businessman Gets Life In Jail For Hijack Scare

special National Investigation Agency court in Ahmedabad Tuesday sentenced a Mumbai-based businessman to life in prison and imposed a fine of Rs.5 crores on him for hijack threat note on a Jet Airways plane in October 2017.
Story first published: Wednesday, June 12, 2019, 11:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X