டெல்லி: கடன்களை வாங்கி திரும்ப கட்டாமல் வங்கிகளை அலையவிடும் நிறுவனங்களுக்கெல்லாம் ஆப்பு வைக்க ரெடியாகிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. கடன் களை வாங்கி விட்டு கட்டாமல் இருந்து வரும் நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இனி யாரும் எங்களிடம் இருந்து தப்பிக்க முடியாது என்கிறது மத்திய அரசு.
ஆமாங்க.. இவ்வாறு நிறுவனங்கள் கடனை வாங்கிவிட்டு ஏமாற்றும் நிலை அதிகரித்து வரும், இந்த நிலையில் இதனை கண்கானிக்க ஒரு சிறப்புக்குழு நியமிக்கப்பட உள்ளதாம்.

இவர்கள் வணிக ரீதியாக கடன் வாங்குபவர்களை தொடர்ந்து கண்கானித்து வருவார்களாம். அதற்கான சிறப்பு குழுவை பரீசிலித்து வருகிறதாம் மத்திய அரசு. ஸ்பெஷல் பர்பஸ் வெகிகிள் (special purpose vehicle) எனும் இந்த குழு அனைத்து பொதுத்துறை வங்கிகளின் மூலம் கடன் வாங்கும் நிறுவனங்களை கண்கானிக்கும் என்றும் கருதப்படுகிறது.
அனைத்து வங்கிகளிடமிருந்து தொகுக்கப்பட்ட மாபெரும் தரவு தளம், இந்த SPVக்கு வழங்கப்படுமாம். இதன் மூலம் கடன் வாங்குபவரின் நிதி ஆரோக்கியத்தை கண்கானிக்கவும், ஒரு டைனமிக் மாதிரி தளத்தை உருவாக்கவும் இது பயன்படும் என்றும் கருதப்படுகிறது.
அதோடு மோடி 2.0 அரசின் 100 நாள் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் கருதப்படுகிறது.
இது குறித்து அரசு வெளிட்யிட்டுள்ள அறிக்கையில் ஜி.எஸ்.டி என்பது ஒரு லாப நோக்கமற்ற, அரசு சாரா தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனமாகும். இதில் மத்திய அரசு 24.5% பங்குகளை மத்திய அரசு வைத்துள்ளது.
இதில் மாநிலங்களும், மாநில நிதி அமைச்சர்களின் அதிகாரமளிக்கப்பட்ட நிதிக்குழுவும் சேர்ந்து 24.5% பங்குகளும் மீதமுள்ள 51% அரசு சாரா நிதி நிறுவனங்களுக்கும் சொந்தமானது. இது மாநில மத்திய அரசுகளின் சிக்கலான வரி முறைகளை ஒருமித்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் தற்போது முன்மொழியப்பட்ட இந்த குழுவானது, கடன் வாங்கியவர்களை கண்கானித்து வரும் மாற்று திறனாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. குறிப்பாக இந்தக் குழுவிடம் அளிக்கப்பட்ட தரவின் மூலம் கடன் வாங்கியவர்கள் கண்கானிக்கபட்டு, அவர்களின் பண பரிமாற்றங்களும் கண்கானிக்கப்படுமாம்.
அதோடு அரசு புதிய வங்கி சட்டங்களை கொண்டு வருவதன் மூலம் வாராக்கடன்களை வசூலிக்க முடியும் என்றும் கருதுகிறதாம். இதற்கான வங்கி சட்டத்தையும் மத்திய அரசு பரீசிலித்தும் வருகிறதாம்.
ஆமாங்க.. வங்கிகள் புதியதாக கடன் கொடுத்தால் பழைய கடன்களை வசூல் செய்ய முடியும் என்றும் கருதப்படுகிறதாம். இதற்கான தான் வங்கிச் சட்டங்களைத் அரசு பரீசிலித்து வருகிறதாம்.
ஆக மொத்ததில் இனி யாரும் கடனை வாங்கி விட்டு யாரும் ஏமாற்ற முடியாது என்றும் அரசு எச்சரிக்கிறது போல.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications