டெல்லி : அரசு பொது நிறுவனங்களின் சுரங்கங்களை தனியார் மையமாக்க வேண்டும். இதன் மூலம் அரசுக்கு வருடத்துக்கு 400 பில்லியன் டாலர் மிச்சமாகும் என்று வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்தியாவில் உள்ள 42 பொதுத்துறை நிறுவனங்களை ஒன்று மூட வேண்டும் இல்லையேல் தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்று ஏற்கனவே நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கூறியிருந்தார். இந்த நிலையில் அனில் அகர்வால் இந்த கோரிக்கை இன்னும் அரசை உசுப்பேற்றுவதாகவும் உள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று நடந்த பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் 3 தொழிலதிபர்களும் மற்றும் பொருளாதார வல்லுனர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் 3 தொழிலதிபர்களில் ஒருவர் தான் வேதாந்தா நிறுவனத்தின் அனில் அகர்வால்.
இறக்குமதி செலவு மிச்சமாகும்?
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அனில் அகர்வால் கூறியதில், 5 பொதுத்துறை நிறுவனங்களின் சுரங்களை தனியார் மையம் ஆக்குவதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 400 பில்லியன் டாலர் மிச்சமாகும் என்றும். இதனால் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். அதோடு பொருளாதாரமும் வளர்ச்சியடையும், மேலும் உள்நாட்டு உற்பத்தியும் அதிகரிக்கும் என்றும் என்றும் கூறியுள்ளாராம் அனில் அகர்வால்.
சுரங்க நிறுவனங்கள்?
ஹிந்துஸ்தான் ஜிங்க், ஹிந்துஸ்தான் காப்பர், கோலார் தங்க சுரங்கம், யுரேனியம் கார்ப்பரேஷன் மற்றும் ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மற்றும் என்.எம்.டி.சி உள்ளிட்ட நிறுவனங்களை தனியார் மையமாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளராம்.
ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் பங்குகளை தான் வாங்கிய போது வெறும் 5000 ஊழியர்கள் மட்டுமே இருந்ததாகவும், தற்போது அந்த நிறுவனத்தில் 25,000 ஊழியர்கள் உள்ளார்கள் என்றும் அனில் அகர்வால் கூறியுள்ளார். அதோடு கடந்த 2002 - 2003ல் வேதாந்தா நிறுவனம், ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் 64.9 சதவிகித பங்குகளை வாங்கியது. மீதமுள்ள 29.5 சதவிகித பங்குகள் மட்டுமே அரசிடம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார் அனில் அகர்வால்.
உலோக உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும்
அரசு விரைவில் என்ணெய் எரிவாயு மற்றும் தங்கம் உள்ளிட்ட உலோக உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும், தற்போது 400 பில்லியன் டாலர் மதிப்பில் இறக்குமதி செய்து கொண்டிருக்கும் இந்தியா, பின்னர் 1 டிரில்லியன் டாலர் இறக்குமதிக்காக கொடுக்க வேண்டி இருக்கும் என்றும் எச்சரித்துள்ளராம்.
சுயாட்சி வழங்க வேண்டும்?
அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் சரி, பொதுத்துறை வங்கிகளும் சரி, தானே இயங்கும் அளவுக்கு சுயாட்சியாக செயல்பட்டால் ஒன்று மூன்று மடங்கு சிறப்பாக செயல்படும். ஏனெனில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு என்ன இல்லை. மிகப்பெரிய ஆற்றலும், அபரீமிதமான திறமையும் உள்ளது. ஆனால் அதன் நிர்வாகிகள் விசாரனைக்கு பயந்தே முடிவு எடுக்க பயப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளாராம்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications