வாஷிங்டன் : அமெரிக்கான்னா சும்மாவா? எங்க விமானத்தையே சுடுவுயா இந்தா வாங்கிக்கோ என்று பதில் தாக்குதல் கொடுத்துள்ளது அமெரிக்கா. ஆமாப்பா.. ஈரான் தங்களது வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது என்று கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடுப்பான அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஈரான் மீது ராணுவ தாக்குதலுக்கு உத்தரவிட்டு, பின்னர் உடனடியாக அதை திரும்பப் பெற்றதும் தெரிந்த விஷயமே. ஆனாலும் சிங்கம் பதுங்கிறது பாய்றதுக்காக தான் என்று காட்டி விட்டது.
எப்படியும் ஈரானிடம் சண்டையிட்டு நேரிடையாக தாக்குதல் நடத்தினால் பலர் கொல்லப்படுவார்கள், அதோடு மற்ற நாடுகளுக்கும் பிரச்சனை என்பதாலேயே டிரம்ப் இந்த முடிவை மாற்றிக் கொண்டதாக அமெரிக்கா ராணுவத்தளபதி கூறியதால் தனது முடிவை மாற்றிக் கொண்டதாக டிரம்ப் அறிவித்திருந்தார்.
தொடரும் அணு ஆயுத வார்?
ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதிலிருந்தே, இந்த இருநாடுகளுக்கும் இடையே பிரச்சினை தொடர்ந்து வருகிறது. தற்போது இந்த பிரச்சினை இருநாடுகளுக்கும் இடையே போர் ஏற்படும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த சூழலில் தான் ஈரானின் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக கூறி வந்தது.
பதிலடி கொடுத்த ஈரான்
ஒரு புறம் ஈரானுக்கு எதிரான நடவடிக்கையை நிறுத்தி வைத்தாலும், கடைசி நிமிடத்தில் முடிவை மாற்றிக் கொண்டாலும், மறுபுறம் இன்னும் அதுகுறித்தான கோப்புக்கள் தனது மேசையில் இன்னும் இருப்பதாகவும் அதற்கு எப்போது வேண்டுமானாலும் வேலை கொடுக்க முடியும் என்றும் டிரம்ப் ஈரானை எச்சரித்துள்ளார். எனினும் அமெரிக்காவுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்று, ஈரான் தன் மீது ஒரு குண்டு விழுந்தால் அதற்காக அமெரிக்காவின் நட்பு நாடுகள் தீக்கிரையாகிவிடும் என்றும், அதற்காக அமெரிக்கா பன்மடங்கு விலை கொடுக்க வேண்டியிருக்கும் எனவும் ஈரான் சவால் விட்டது.
பிரச்சனையை தடுக்க திட்டம்
இது ஒரு புறம் இருக்க, நாளுக்குநாள் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான், ஒரு புறம் தனது ஆயுதங்களை (அணு ஆயுதங்களை வைத்தே ) மிரட்டுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ஈரானின் அடிமடியிலேயே கைவைத்துள்ளது அமெரிக்கா. ஆமாங்க.. ஈரானில் முக்கிய ஆயுதப்படையின் ஆயுத கட்டுப்பாட்டில் இருக்கும் கம்யூட்டர்கள் மீது அமெரிக்கா இணைய தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கணினிகள் பாதிப்பு?
இவ்வாறு இணையத்தின் மூலம் சைபர் அட்டாக் எனப்படும் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், இதனால் ஈரானின் ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை ஏவும் அமைப்புகளின் கட்டுப்பாட்டு கணினிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிரம்பும் ஒப்புதல்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் ஒப்புதல் பெற்ற பிறகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்த தாக்குதலுக்காக வாரக்கணக்கில் திட்டமிட்டதாகவும் அமெரிக்க ஊடகங்கள் கூறியுள்ளன. அதோடு ஓமன் வளைகுடா பகுதியில் எண்ணெய் கப்பல்கள் மீது கண்ணி வெடிதாக்குதல் நடத்தப்பட்டதற்கும், உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கும் பதிலடியாகத் தான் ஈரான் மீது இந்த இணைய தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்து ரெடியாக லேட் ஆகும்?
இந்த சைபர் அட்டாக் மூலம் ஈரான் புரட்சிகர ஆயுதப்படையின் கம்ப்யூட்டர்கள் பல செயலிழந்ததாகவும் கூறப்படுகிறது, அதோடு அவை மீண்டும் செயல்பாட்டிற்கு வர குறிப்பிட்ட காலம் ஆகும் என்று கூறப்படுகிறது. இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் முன்னதாக ஈரான் அமெரிக்கா மீது இணைய தாக்குதல் நடத்தவும், அமெரிக்க கடற்படையின் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்யவும் முயற்சிப்பதாக டிரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டியது கவனிக்கதக்கது.
ஈரான் மீது கடுமையான பொரூளாதார தடை
அமெரிக்கா ஈரான் மீது இணைய தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி அந்நாட்டின் மீது, இதுவரை வேறு எந்த நாட்டிற்கும் விதிக்காத கடுமையான பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாற்றாவிட்டால் பிரச்சனைகள் தொடரும்
இது குறித்து அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் கூறுகையில், ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதை தடுக்க, பொருளாதாரத் தடைகள் மிக அவசியமானது. அதோடு ஈரான் தனது போக்கை கண்டிப்பாக மாற்ற வேண்டும். மாற்றாவிட்டால் ஈரான் மீதான பொருளாதார தடை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதோடு ஈரானுடன் போரை விரும்பவில்லை. மோதல் ஏற்பட்டு விட்டால் அந்நாடு முற்றிலுமாக அழிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படும் அதை ஒரு போதும் விரும்ப வில்லை எனவும் டிரம்ப் கூறியுள்ளார்.