மும்பை : ஒரு புறம் கொடிகட்டு பறந்து கொண்டிருக்கும் முகேஷ் அம்பானி எதை தொட்டாலும் வெற்றி என்ற நிலையில், அனில் அம்பானி எதை தொட்டாலும் நஷ்டம் என்ற நிலையிலேயே இருந்து வருகிறது. அதோடு பல சொத்துகளையும் விற்று கடனை கட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.
கடன் பிரச்சனையின் எல்லைக்கே சென்றுள்ள அனில் அம்பானி, தனது பல சொத்துக்களையும், வணிகங்களையும் கடன் கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது சொத்துக்கு சொத்தாக மும்பையில் இருக்கும் Santacruz headquarters அலுவலகத்தை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ திட்டமிட்டுள்ளாராம். இதற்காக பலரிடம் பேச்சு வார்த்தையும் நடத்தி வருகிறாராம்.
பிளாஸ்டோனுடன் பேச்சு வார்த்தை?
உலகளாவிய நிறுவனங்களுடனும் மற்றும் பிளாஸ்டோன் நிறுவனத்துடனும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே கடன் பிரச்சனை காரணமாக பல சொத்துகளை விற்று கடனை கட்டியுள்ள அனில் அம்பானி தற்போது மீண்டும் ஒரு சொத்தை விற்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த இடம் பிரச்சனையில் உள்ளது?
இதற்கிடையில் ஏற்கனவே கடன் பிரச்சனையால் சிக்கித் தவித்து வரும் அனில் அம்பானிக்கு சில சட்ட சிக்கல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அட ஆமாங்க.. இந்த அலுவலக சொத்தை விற்க முடிவெடுத்திருந்தாலும் இதில் சில சட்ட சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. 7,00,000 சதுர அடிகளை கொண்டுள்ள இந்த இடம் மும்பையின் வெஸ்டர்ஸ் எக்ஸ்பிரஸ் சாலையில் அமைந்துள்ளது. இன்றைய விலைக்கு இந்த இடம் 1500 - 2000 கோடி ரூபாய் வரைக்கும் போகலாம் என்றும் கருதப்படுகிறது.
அலுவலகத்தை மாற்ற திட்டம்?
சொத்து ஆலோசனை நிறுவனமான, JLL நிறுவனத்தினை ஆலோசனை வழங்குவதற்கு அனில் அம்பானி நியமித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சூழ்நிலையில் அனில் அம்பானி தனது அலுவலகத்தை தெற்கு மும்பையில் உள்ள தனது பல்லார்ட் ஸ்டேட் அலுவலகத்திற்கு மாற்றம் செய்ய யோசித்து வருவதாகவும், இது குறித்து ஆலோசித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
விற்று பணமாக்க முடிவு?
கடந்த 2005 ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தையே இரண்டாக பிரிக்க முடிவெடுத்த அண்ணன் தம்பிகளில், அனில் அம்பானிக்கே இந்த அலுவலக சொத்து கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. அதோடு அனில் அம்பானி இதை தற்போது விற்று காசு பார்க்க நினைக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
லட்சாதிபதி!
கடந்த 2008ல் 42 பில்லியன் டாலர் சொத்துக்களை கொண்ட அனில் அம்பானி, அந்த சமயத்தில் உலகின் ஆறாவது பணக்காரராக இருந்தார். இந்த நிலையில் தற்போது லட்சாதிபதி எனும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதோடு அவரின் பங்கு மதிப்பு சுமார் 3651 கோடி ரூபாயாகவும் சரிந்துள்ளது. எனினும் கடந்த மார்ச் 2018ல் இந்த குழுமத்தின் கடன் 1.7 லட்சம் கோடி ரூபாயை கொண்டிருந்தது. இந்த நிலையில் தற்போது பல சொத்துக்களையும் வணிகங்களையும் விற்பனை செய்ததன் மூலம் இந்த நிறுவனம் தற்போது கடனை வெகுவாக குறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications