டெல்லி: இந்தியாவில் நாளுக்கு நாள் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதாக பல கருத்துகள் வெளியாகி வரும் நிலையில், இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் எம்பி அடூர் பிரகாஷ் பேசும்போது, நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்திருப்பதாக கூறினார்.
அதோடு ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு மத்திய அரசிடம் ஏதாவது திட்டம் இருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதில் அளித்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை மந்திரி சந்தோஷ் குமார் கேங்வார் அளித்த பதில் கூறியதாவது, வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் தவறானவை (brahmak).
அதோடு வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. மேலும் வேலைவாய்ப்பு நிலைமை தொடர்பாக விவாதம் நடத்துவதற்கு நான் தயாராக உள்ளேன் என்றும் கூறியுள்ளார்.
வேலைவாய்ப்பின்மை பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. விரைவில் இது தொடர்பான அறிக்கை வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளாராம்.
வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.