டெல்லி: தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஏற்கனவே ஜியோவால் திண்டாடி வரும் நிலையில், பல நிறுவனங்கள் காணமல் போய் விட்டன. இந்த நிலையில் டாடா டெலிசர்வீசஸ் நுகர்வோர் மொபைல் வர்த்தகத்தை, பார்தி ஏர்டெல் நிறுவனம் முழுமையாக கையகப்படுத்தியுள்ளது.
இது குறித்து இந்த இரு நிறுவனங்களும் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாடா டெலிசர்வீசஸ் (Tata Teleservices Limited ) மற்றும் டாடா டெலிசர்வீசஸ் மஹாராஷ்டிரா (Tata Teleservices (Maharashtra) Limited ) நிறுவனத்தை பார்தி ஏர்டெல் மற்றும் பார்தி ஹெக்ஸாகாம் ஆகியவற்றுடன் இணைக்கும் நடவடிக்கை கடந்த திங்கட்கிழமை முழுமையாக நிறைவடைந்ததாக இந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்த நிலையில் டாடா டெலிசர்வீசஸ் மற்றும் டாடா டெலிசர்வீசஸ் மஹாராஷ்டிரா நிறுவனங்களுக்கு சொந்தமான அனைத்து வாடிக்கையாளர்கள், சொத்துகள் மற்றும் அலைகற்றை உள்ளிட்ட அனைத்தும் பார்தி ஏர்டெல் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ஏர்டெல் நிறுவனம் டாடா டெலி சர்வீசஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியதையடுத்து, டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 19 தொலைத் தொடர்பு வட்டங்களில் உள்ள செயல்பாடுகள் அனைத்தும் பார்தி ஏர்டெலுக்கு சொந்தமாகியுள்ளது.
இந்த இணைப்பின் மூலம் பார்தி ஏர்டெல் அலைகற்றை மேலும் வலுவடையும் என்றும் கருதப்படுகிறது.
இந்த நிலையில், ஏற்கனவே தொலைத் தொடர்பு துறையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோவின் போட்டியை சமாளிக்க முடியாமல் கடந்த மாதம் பல வாடிக்கையாளர்களை இழந்ததாகவும் ஜியோ அறிவித்துள்ளது.
இதனால் ஜியோ நிறுவனத்திற்கு போட்டி போட முடியாவிட்டாலும் அதற்குண்டான நடவடிக்கைகளில் ஏர்டெல் நிறுவனம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடதக்கது. ஒரு புறம் வாடிக்கையாளர்கள் இழந்து வந்தாலும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மிக வலுவாக தனது ஏர்டெல் நிறுவனத்தை அடித்தளமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்தியாவில் பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு நஷ்டம் என்றாலும், வெளி நாடுகளில் முன்னிலை வகித்து வருவதால் இந்த நஷ்டத்தினை ஈடுகட்டியதாகவும் ஏர்டெல் முன்னரே அறிவித்தது.
இந்த நிலையில் ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் தற்போது தான் விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத் தக்கது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications