டெல்லி : எல்.ஐ.சி நிறுவனத்தின் மொத்த பிரிமிய வருவாய் 5.7 சதவிகிதம் அதிகரித்து, கடந்த ஆண்டில் மொத்த பிரிமிய வருவாய் 3.37 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அட ஆமாங்க.. கடந்த 2018 - 2019ம் நிதியாண்டில் எல்.ஐ.சி நிறுவனத்தின் மொத்த பிரிமிய வருவாய் 3.37 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஆயுள் காப்பீட்டு துறையில், பொதுத் துறையை சேர்ந்த நிறுவனமான எல்.ஐ.சி நிறுவனம், இத்துறையில் ஜாம்பாவானாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக புளுசிப் எனப்படும் நட்சத்திர பங்குகளிலேயே பெரும்பாலும் அதிக முதலீட்டை செய்து வரும் எல்.ஐ.சி, தனது வருவாயில் 94 சதவிகித வருவாயை முகவர்கள் வாயிலாகவே ஈட்டுகிறது. மீதமுள்ள தொகையினை ஆன்லைன் மற்றும் வங்கிகள் வாயிலாக மீத வருவாய் கிடைக்கிறது.
அதிலும் குறிப்பாக கடந்த 2018 - 2019ம் ஆண்டில் எல்.ஐ.சி நிறுவனத்தின் மொத்த பிரிமியம் வருவாய் 3.37 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 6 சதவிகிதம் அதிகமாகும். கடந்த 2017 - 2018ல் ,மொத்த பிரிமியம் வருவாய் 3.17 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பொதுத்துறை நிறுவனமான இந்த நிறுவனத்தின் ஆயுள் மற்றும் குழு மேம்பாஅட்டிலிருந்து அதன் புதிய வணிக வருமானம் கடந்த 2018 -2019ல் 10.11 சதவிகிதம் அதிகரித்து 91,179.52 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டான 2017 -2018ல் 82,807.83 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் மொத்த வருமானம் 7.10 சதவிகிதம் அதிகரித்து 5,60,784.39 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முன்னர் 5,23,611,11 கோடி ரூபாயாக இருந்தது.
இதுவே சென்ற ஆண்டின் பிரிமியம் 2.50 லட்சம் கோடிக்களுக்கு பாலிசிகளை விற்றுள்ளது இந்த நிறுவனம். இது இதற்கு முந்தைய ஆண்டில் 1.98 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆக மொத்தம் இந்த நிறுவனத்தின் மொத்த சொத்தின் மதிப்பு 9.38 சதவிகிதம் அதிகரித்து, 31.11 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 28.45 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் எல்.ஐ.சி நிறுவனம் பங்குகள் கடன் பத்திரங்கள் மற்றும் அதிகளவு முதலீட்டை மேற்கொண்டு வருகிறது. ஏராளமான் நிதி, ஆதாரத்தினைத் கொண்டுள்ள இந்த நிறுவனம், இந்தியாவில் மிகப்பெரிய நிதி நிறுவன முதலீட்டாளராகவும் உள்ளது.
இதில் கவனிக்கபட வேண்டிய விஷயம் என்னவெனில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு வெளியீடுகளுக்கு, இந்த நிறுவனம் ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications