டெல்லி: கூடிய விரைவில், நிறைய கடன் வைத்திருக்கும் Air India-வை தனியார் மயம் ஆக்குவோம் என சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மாநிலங்களவையில் நேற்று (ஜூலை 03, 2019, புதன்கிழமை) சொல்லி இருக்கிறார்.
Air India நிறுவனத்திடம் நல்ல சொத்துக்கள் மற்றும் விமானங்கள் எல்லாம் இருக்கின்ற போதிலும், நாள் ஒன்றுக்கு சுமார் 15 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறதாம். இப்போதே Air India நிறுவனத்துக்கு சுமார் 59,000 கோடி ரூபாய் கடன் இருக்கிறதாம். இதில் 29,000 கோடி ரூபாய் கடனை கழித்துக் கொள்வதாகவும் சொல்லி இருக்கிறது மத்திய அரசு. இதற்கு மத்தியில் Air India நிறுவனத்தை லாபகரமான நிறுவனமாக மாற்ற அரசு தன்னால் ஆன வரை முயற்சித்துக் கொண்டிருக்கிறது எனவும் பேசி இருக்கிறார்.

மத்திய அரசு Air India-வை தனியாரிடம் கொடுக்க எல்லா வேலைகளை பார்த்துக் கொண்டு தான் இருந்தது. ஆனால் நிலையற்ற விமான எரிபொருள் விலை மற்றும் நிலையற்ற டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு போன்ற காரணத்தால் Air India நிறுவனத்தை தனியார் மயமாக்கும் வேலையைக் கொஞ்சம் கிடப்பில் போட்டிருக்கிறது.
கடந்த 2018-ம் ஆண்டே மத்திய அரசு Air India நிறுவனத்தின் 76 சதவிகித பங்குகளை விற்க முயன்றது. ஆனால் Air India நிறுவனத்தை வாங்க எந்த ஒரு முதலீட்டாளரோ, நிறுவனமோ முன் வராததால் திட்டம் தோல்வியுற்றது. இப்போது மீண்டும் Air India-வை தனியார்மயமாக்க ஒரு புதிய திட்டத்துடன் வருவதாகச் சொல்லி இருக்கிறது மத்திய அரசு.
சமீபத்தில் மத்திய அரசு, சுமார் 4,000 கோடி ரூபாயை Air India நிறுவனத்துக்கு பணம் கொடுத்ததும் நினைவுக்கு வருகிறது. இப்படித் தான் ஜெட் ஏர்வேஸும் கடைசி வரை யாராவது இந்த நிறுவனத்தை வாங்க வருவார்கள். அவர்களிடம் இருந்து மொத்தக் கடனையும் வசூலித்துக் கொள்ளலாம் என காத்திருந்தது எஸ்பிஐ. கடைசி வரை ஜெட் ஏர்வேஸை யாரும் வாங்க முன் வராததால், ஜெட் ஏர்வேஸின் சொத்துக்களை விற்று கடன்களை மீட்டுக் கொள்ளும் நிலைக்குப் போய்விட்டது. இப்போது ஏர் இந்தியாவுக்கும் இதே நிலை தான் வருமோ என கொஞ்சம் யோசிக்கத் தோன்றுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications