டெல்லி : இந்தியாவில் ஒவ்வொரு முறையும் பட்ஜெட்க்கு முந்தைய நாளில் வெளியிடப்படும் சர்வே தான் இந்த "Economic survey"
சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் இருக்கும் என்பதற்கு ஏற்ப, இந்த பட்ஜெட்டும்.
எனினும் இந்த Economic survey சர்வே என்பது, நாங்கள் இதை செய்ய நினக்கிறோம் என்று சொல்வது. இதுவே பட்ஜெட் என்பது இதையொட்டி தான் இருக்கும்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இந்த "Economic survey" பட முதன் முறையாக தாக்கல் செய்ய விருக்கும் சுப்ரமணியன் கிருஷ்ணமூர்த்தி அப்படி என்ன தான் சொல்லப் போகிறார்.
பட்ஜெட்க்கு முந்தைய நாளே சமர்பிக்க இருக்கும் இந்த எக்னாமிக் சர்வேயின் முக்கிய சிறப்பம்சங்கள் என்ன?
நடப்பு நிதியாண்டில் மொத்த உள் நாட்டு வளர்ச்சி 7சதவிகிதம் வளர்ச்சியை மையமாக கொண்டுள்ளதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 5.8 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த 2018ம் நிதியாண்டில் 6.4 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதோடு முதலீட்டு விகிதம் குறைந்துள்ளதால் முதலீட்டை அதிகரிக்கும் முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் தெரிகிறது.
மெதுவான வளர்ச்சி, ஜி.எஸ்.டியில் நிகழந்து வரும் பிரச்சனை, நிறுவனங்கள் குறித்தான நடவடிக்கை என்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு கணக்கு பற்றாக்குறையை தீர்க்க புதிய திட்டங்கள் பற்றி கூறப்படலாம் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச அளவில் நிகழும் வர்த்தக பிரச்சனைகளால் ஏற்றுமதி பாதிக்கப்படலாம் என்றும் கருதப்படுகிறது. இதனால் இது குறித்த நடவடிக்கைகள் குறித்து கூறப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ச்சியை அதிகரிக்க புதிய திட்டங்களில் முதலீடுகள் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு அன்னிய முதலீடுகள் குறைந்துள்ளதையடுத்த, அன்னிய முதலீடுகளை அதிகரிக்க, முதலீட்டு கொள்கைகள் தளர்த்தப்படலாம் என்றும் கருதப்படுகிறது.