டெல்லி : மோடி இரண்டாவது முறையாக, பெரும்பான்மையான இடத்தை பிடித்து ஆட்சிக்கு பின்னர் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகும். இது மக்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ,உருவாக்கிய நிலையில் ஒரு வழியாக தாக்கல் செய்யப்பட்டு விட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி இந்த பட்ஜெட் மக்களின் நலனையும், அதோடு வளர்ச்சி மற்றும் எதிர்கால நலனை கருத்தில் கொண்ட பட்ஜெட் எனவும் புகழாரம் சூட்டியுள்ளாராம்.

நடப்பு நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், தற்போது நிதியமைச்சர் சீதாராமன் தலைமையில் புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிலும் இது முதல் பெண் முழு நேர நிதியமைச்சர் என்ற முறையில் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளார் நிர்மலா சீதாராமன். இந்த நிலையில் இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சமாக, பிரதமர் மோடி முன்னர் இலக்கு வைத்திருந்த 5 டிரில்லியன் டாலர் இலக்கை அடைவதற்காக பல திட்டங்களை வைத்துள்ளதாகவும், அதோடு நடப்பு நிதியாண்டில் 3 டிரில்லியன் டாலராகவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதோடு மகளிர், தொழிலாளர்கள், விவசாயிகள், என அனைவரையும் மனதில் வைக்கப்பட்டு இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதோடு நடுத்தர மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தும் விதமாகவும் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றும் மோடி புகழாரம் செய்துள்ளார்.
அதோடு மக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தவுள்ள ஒரே நாடு ஒரே அட்டை மூலமாக பயணிக்கும் திட்டங்கள் குறித்தும், அதோடு டிஜிட்டல் முறையில் பணத்தை செலுத்துவோருக்கு எந்த கட்டணமும் கிடையாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இது எல்லாவற்றையும் விட இனி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அனைத்து வீடுகளுக்கும் தூய்மையான தண்ணீர் வசதி செய்து தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications