டெல்லி : மோடி 2.0 அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் பலத்த எதிர்பார்ப்பை மக்களிடையேயும் சரி, முதலீட்டாளர்கள் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியது என்றே கூறலாம்.
இந்த நிலையில் முடிந்த பட்ஜெட் கூட்டத்தில், பெரிய அளவில் மாற்றம் இல்லை என்பது ஒரு புறம் சந்தோஷமே. எப்பவும் பட்ஜெட் தாக்கலின் போது காளையும் கரடியும் சண்டை போட்டுக் கொள்ளும் விதமாகவே அதிரடியான பல ஏற்ற இறக்கங்களை சந்திக்கும். இன்று அவ்வாற எந்த வித தாக்கமும் இல்லை என்றே கூறலாம்.

பொதுவாக பட்ஜெட் தாக்கலுக்கு சில நாட்களுக்கு முன்பே முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை வெளியேற்ற தொடங்கி விடுவார்கள். ஏனெனில் பட்ஜெட் அறிவிப்புகளில், தொழில்துறை அல்லது முதலீடு செய்திருக்கும் நிறுவனங்களுக்கு அல்லது துறைக்கு எதிரான அம்சங்கள் இடம் பெற்றால், அது முதலீட்டை பாதிக்கும் என்ற அச்சம் காணப்படும்.
ஆனால் மத்தியில் மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமர் மோடியே ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அதிகளவு மாற்றம் இருக்காது என்றும் கருதப்படுகிறது. அதோடு மிக மிகத் தெளிவான அறிவிப்புகள் வெளியாகும் என்ற கருத்தே முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வந்தது.
இதனாலேயே கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டின் போதும் கூட இந்திய பங்கு சந்தை குறியீட்டெண்கள் உயர்ந்தே காணப்பட்டது. ஆனால் இன்றைய பட்ஜெட் தாக்கலில், பெரிய அளவில் அப்படி ஏதும் பெரிய அளவில் மாற்றம் இல்லாததால், இன்றைய பங்கு சந்தைகள் காலையில் ஏற்றத்துடன் தொடங்கினாலும் முடிவில் வீழ்ச்சியையே கண்டுள்ளன.
குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 395 புள்ளிகள் குறைந்து 39,513 ஆக முடிவடைந்துள்ளது. இதுவே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 135 புள்ளிகள் குறைந்து 11,811 ஆக முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதுவே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.53 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக நிஃப்டி 50ல் யெஸ் பேங்க், என்.டி.பி.சி, எம் & எம், யு.பி.எல் உள்ளிட்ட பங்குகள் அதிகபட்சமாக 4 - 8 சதவிகிதம் வரை வீழ்ச்சி கண்டுள்ளன. இதுவே கோடாக் பேங்க், இந்தஸ்தங் பேங்க், எஸ்.பி.ஐ, இந்தியா புல்ஸ் ஹவுஷிங் 1 - 3 சதவிகிதம் ஏற்றம் கண்டுள்ளன.
More From GoodReturns

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!



Click it and Unblock the Notifications