என்னப்பா சொல்றீங்க.. ரூ.8131 கோடி லாபமா.. 12,351 பேருக்கு பணியா.. டி.சி.எஸ் அதிரடி அறிவிப்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை : தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ள டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனமானது, தனது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ரூ.8,131 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இது முந்தைய காலாண்டான மார்ச் காலாண்டில் 8,126 கோடி ரூபாயாக இதன் நிகர லாபாம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 
என்னப்பா சொல்றீங்க.. ரூ.8131 கோடி லாபமா.. 12,351 பேருக்கு பணியா.. டி.சி.எஸ் அதிரடி அறிவிப்பு!

இது குறித்து டிசிஎஸ் நிறுவனத்தின்,தலைமைச் செயல் அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் கூறுகையில், நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டிலேயே ஒரு நிலையான மற்றும் வலுவான தொடக்கத்தையும் நாங்கள் பெற்றுள்ளோம்.

அதோடு டி.சி.எஸ் நிறுவனமானது நடப்பு நிதியாண்டின் ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ.38,172 கோடி வருவாயினை ஈட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.34,261 கோடியாக இருந்தது. இது கிட்டதட்ட11.4 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் நிறுவனத்தின் மொத்த வருவாயில் டிஜிட்டல் பிரிவிலான வருவாயின் பங்களிப்பு மட்டும் 32.2 சதவிகிதமாகும். இது கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டை காட்டிலும், இப்பிரிவிலான வருவாயானது, நடப்பு நிதியாண்டில் 42.1 சதவிகித அளவுக்கு வளர்ச்சியினை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. .

மேலும் நிகர லாபமானது ரூ.7,340 கோடியிலிருந்து, கிட்டதட்ட 11 சதவிகிதம் அதிகரித்து, ரூ.8,131 கோடி ரூபாபாயை எட்டியுள்ளது கவனிக்கதக்கது.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், நிறுவனத்தின் முதல் காலாண்டில் 12,356 பணியாளர்கள் புதிதாக இணைந்துள்ளனராம். இதனையடுத்து ஒட்டுமொத்த பணியாளர்களின் எண்ணிக்கையானது ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு 4,36,641 ஆக உயர்ந்துள்ளதாம்.

இது மட்டும் அல்ல கடந்த ஜூன் மாத காலாண்டில், பங்கு ஒன்றுக்கு ரூ.5 டிவிடெண்ட் வழங்க இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழுவானது பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 12,356 ஊழியர்களை பணிக்கு சேர்த்துள்ளதாகவும், இது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த காலாண்டில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு கிட்டதட்ட 30,000 புதிய பட்டதாரிகளை இணைத்துள்ளதாகவும், இவர்களில் 40 சதவிகிதத்திற்கும் மேல் வெளி நாடுகளில் பணிபுரிவதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு 4,36,641 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் பெண்களின் விகிதம் 36.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TCS reported profit of Rs 8,131 crore for the quarter ended June 2019

TCS reported profit of Rs 8,131 crore for the quarter ended June 2019
Story first published: Wednesday, July 10, 2019, 18:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X