டெல்லி : இந்தியா, உலகப் கோப்பை கிரிகெட் விளையாட்டில் தோற்றுப்போனாலும் மிகச் சிறப்பாக விளையாடியதாகவே பல தரப்பிலும் கூறப்படுகிறது.
ஆமாங்க.. புதன் கிழமையன்று நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. இறுதி வரை கடுமையாக போராடியும் தோல்வி அடைந்ததால், ஒரு புறம் இந்திய ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அது என்ன கேட்கிறீங்களா? டெல்லியில் சட்டா மார்கெட் என்ற சட்ட விரோத சூதாட்ட சந்தையில், கடந்த புதன் கிழமையன்று நடந்த போட்டியின்போது, பலர் இந்தியாவுக்கு ஆதரவாக பந்தயம் கட்டியதில் பல கோடி ரூபாய் பணத்தை இழந்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ரூ.1 பில்லியனுக்கும் மேல் இழப்பு?
கடந்த புதன் கிழமை நடந்த உலகப் கோப்பை அரையிறுதி போட்டியில், இந்தியா கட்டாயம் வெற்றி பெறும் என்று கருதப்பட்டு வந்த நிலையில், நியூசிலாந்த் அணியினரால் இந்தியா எதிர்பாராத தோல்வியை கண்டது. ஆமாங்க.. மிகக் குறைந்த இலக்கில் வெற்றியை பறிகொடுத்தது இந்தியா. இதனால் இந்திய ரசிகர்கள் பெரும் வருத்தத்திற்குள்ளானார்கள். அதே நேரம் டெல்லியில் உள்ள சட்டா மார்கெட்டில் இந்தியா தான் ஜெயிக்கும் என கோடி கணக்கில் பெட் கட்டியவர்கள் அனைவரும், தங்களது கோடி கணக்கான பணத்தையும் இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆன்லைன்களிலும் பெட்?
ஆட்டத்தின் சூழ்நிலைகளை பார்த்து, யார் வெற்றிப் பெறுவார்கள், தோற்பார்கள் என கூறி, குறிப்பிட்ட பணத்தை அந்த அணியின் பெயரில் பந்தயத்தில் வைப்பர். நியூசிலாந்துடனான 2 நாள் ஆட்டம் மிகுந்த பரபரப்பானதாக இருந்தது. நியூசிலாந்து அணி நேற்று முன்தினம் ஆடிய ஆட்டத்தில் இருந்தே சுவாரஸ்யத்திற்கு பஞ்சமின்றி பந்தயம் சென்றது. இந்த நிலையில் புதன் கிழமையன்று, ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கோலி, கே.எல்.ராகுல், ரோகித் ஷர்மா ஆகியோர் வெளியேறினர்.
இந்தியாவுக்காகவும் பெட்?
சிலர் நியூசிலாந்து அணி தான் வெற்றிப் பெறும் என பந்தயம் கட்டினர். ஆனால் டோனி -ஜடேஜா களமிறங்கியவுடன், இன்றைய வெற்றி இந்திய அணிக்கே எனப் பலரும் நம்பினர். இதனால் இந்தியா மீது பந்தயமும் கட்டினர். எதிர்ப்பாராத விதமாக டோனியும் அவுட் ஆகவே, எஞ்சிய மொத்த நம்பிக்கையும் சிதைந்தது. இதனால் இந்திய அணியை நம்பி பணத்தை கட்டிய பலரும் ஏமாற்றமடைந்தனர். இந்த தோல்வியால் பந்தயம் கட்டியவர்களுக்கு 100 கோடிகளுக்கும் மேல் நஷ்டமானதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
239 ரன்கள் இலக்கு!
உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில், முதலாவதாக பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா ஒரு ரன்னிலேயே அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து கேப்டன் கோலியும் ஒரு ரன்னில் அவுட் ஆகவே, இந்திய ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் இந்தியா தோல்வியை கண்டது.
More From GoodReturns

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: முகேஷ் அம்பானிக்கு கிடைத்த அட்சய பாத்திரம்!! ஒவ்வொரு நொடிக்கும் காசு!!

தோனி-க்கு நிகராக சஞ்சு சாம்சன்.. குரு சிஷ்யன் என்றால் சும்மாவா..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications