டெல்லி : ரிலையன்ஸ் ஜியோவால் மற்ற தொலைத் தொடர் நிறுவனங்கள் பல காணமல் போனதும், சில நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதும் கவனிக்கதக்க விஷயமாகும்.
இந்த நிலையில் மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் புதிய அறிவிப்பின் படி, வழக்காக இந்த முறையும் ரிலையன்ஸின் ஜியோ நிறுவனமே முன்னிலையில் இருப்பதாக அறிவித்துள்ளது.
இதே மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஜியோவுடன் போட்டி போட முடியாமல் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.
ஜியோ தான் முன்னிலை!
ஆமாங்க.. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், கடந்த மார்ச் 2019வுடன் முடிவடைந்த காலாண்டில், அதன் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் சுமார் 9,839 கோடி ரூபாயாக உள்ளதாம். அதோடு பார்தி ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் முறையே அடுத்தடுத்த இடத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வோடபோன் & ஏர்டெல் நிறுவனங்களுக்கு நஷ்டம் தான்
என்று ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் காலாடி எடுத்து வைத்ததோ அன்றிலிருந்தே மற்ற நிறுவனங்களுக்கு ஏழரை சனி தான். ஆமாங்க.. அதிலும் கடந்த மார்ச் 2019 மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக இருந்த வோடபோன், கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இதன் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் 1.25 குறைந்து 7,133.4 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதுவே பார்தி ஏர்டெல் நிறுவனம் 8 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு 5,920.2 கோடி ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜியோவுக்கு கூட கொஞ்சம் டல் தான்?
இது குறித்து டிராய் நிறுவனம் கூறுகையில், ஜியோ நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் ஜியோ நிறுவனத்தின் சரி செயப்பட்ட மொத்த வருவாய் 9,839 கோடி ரூபாயாக இருந்தாலும், கடந்த டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது கிட்டதட்ட 14.6 சதவிகிதம் வீழ்ச்சி தான். கடந்த டிசம்பர் காலாண்டில் அனுபவித்த வருவாயை ஜியோவும் கூட பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறைந்தது?
கடந்த மார்ச் காலாண்டில் தொலைத் தொடர்பு செயல் திறனை அளவிடும், "இந்தியன் டெலிகாம் சர்வீசஸ்" என்ற தலைப்பில் டிராய் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி, மார்ச் 2019ல் இறுதியில் நாட்டின் தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1,183.5 மில்லியனாக குறைந்துள்ளது. இதுவே டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது 1.20 சதவிகிதம் குறைந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 1.88 சதவிகிதம் குறைந்துள்ளது.
வயர்லெஸ் வருவாய் அதிகரிப்பு?
இந்தியாவின் ஒட்டுமொத்த டெலிடென்சிட்டி கடந்த மார்ச் 2019ல் 90.11 ஆக குறைந்துள்ளது. இது முன்னர் கடந்த டிசம்பர் 2018ல் 91.45 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் வயர்லெஸ் சேவைக்கான பயனரின் மாத சராசரி வருவாய், நடப்பு ஆண்டில் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 1.80 சதவிகிதம் அதிகரித்து 71.39 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுவே கடந்த டிசம்பர் 2018ல் 70.13 ரூபாயாக மட்டுமே இருந்தது.
தொலைத் தொடர்பு சேவையின் மொத்த வருவாய்?
இது ஒரு புறம் இருந்தாலும், கடந்த மார்சி 2019 காலாண்டில், தொலைத்தொடர்பு சேவைத் துறையின் மொத்த வருவாய் மற்றும் சரி செய்யப்பட்ட மொத்த வருவாய் முறையே 58,414, கோடி மற்றும் 35,932 கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications