வாஷிங்டன் : ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயனாளர்களின் ரகசிய தகவல்களை திருடியதற்காக பேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் கோடி அபராதம் விதிக்கப்படுள்ளது.
ஆமாங்க.. பயனாளர்களின் ரகசிய தகவல்களை திருடியதற்காக பேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் கோடி அபராதம் விதிக்கப்படுள்ளது.

சர்வதேச அளவில் பல சமுக வலைத்தளங்கள் இயங்கி வந்தாலும் அனைத்திலும் முன்னிலையில் இருப்பது ஃபேஸ்புக் மட்டுமே என்றே கூறலாம்.
சமீபத்தில் முகநூல் நிறுவனம் பயனர்களின் தகவலை மூன்றாம் நபர்களிடம் பகிர்வதாக தகவல்கள் வெளியாகியது. இது பல சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இப்பிரச்சனை சற்று சர்ச்சையை ஏற்படுத்தியது என்றும் கூறலாம்.
முகநூல் பயனாளர்களின் தரவுகளை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், அந்நிறுவனம் மீது விதிக்கப்பட்டிருந்த 5 பில்லியன் டாலர்கள் அபராதத்துக்கு மத்திய விசாரணை கமிஷன் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
சுமார் 87 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை, அரசியல் ஆலோசனை வழங்கும் நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிடிகா தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டை அந்த நாட்டின் மத்திய வர்த்தக ஆணையம் விசாரித்து வந்தது. எனினும் இதுவரை வெளியான இந்த செய்தி குறித்து ஃபேஸ்புக் எந்தவித கருத்தும் தெரிவிக்க ஏதுமில்லை என்று முகநூல் மற்றும் மத்திய வர்த்தக ஆணையம் தெரிவித்துள்ளது கவனிக்கதக்கது.
ஒரு தொழில்நுட்ப நிறுவனம் மீது அமெரிக்காவின் மத்திய விசாரணை கமிஷன் விதிக்கும் அதிகபட்ச அபராத தொகை இது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2012ல் கூகுள் நிறுவனம் அதன் பயனாளிகளின் தகவல் வெளியானது எனக் கூறப்பட்டது. இந்த நிலையில் அவர்களுக்கு 22.5 மில்லியன் டாலர் அந்த சமயம் அபராதமாக விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது பேஸ்புக் நிறுவனத்தின் கடந்த 2018 ஆம் ஆண்டு வருவாயில் 9 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
ஒரு புறம் இது குறித்து பல சர்ச்சைகள் பல கருத்துகள் வெளியிடப்பட்டாலும், மறுபுறம் தொடர்ந்து பேஸ்புக் இது போன்ற சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இதனால் இதற்கு தகுந்தாற் போல் அடிப்படை கட்டமைப்புகளில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications