டெல்லி : ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) வந்த பிறகு மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆட்டம் காண தொட்ங்கின. அதிலும் பல நிறுவனங்கள் காணமல் போயின. சில நிறுவனங்கள் மட்டும் இருக்கும் நிலையில் முடிந்த அளவுக்கு ஜியோவுடன் போட்டி போட்டு போண்டியாதானது தான் மிச்சம்.
ஆமாங்க.. ஜியோவுக்கு சமமாக போட்டி போட நினைத்து பல சலுகளைகளை ஜியோவைப் போலவே வாரி இறைத்தன. எனினும் ஒரு கட்டத்தில் நஷ்டங்களை காணவே சலுகைகள் சற்றே குறைந்து விட்டன என்றே கூறலாம்.
இந்த நிலையில் CLSA வெளியிட்டுள்ள அறிக்கையில், ரிலையன்ஸ்ஸின் ஜியோ போஸ்ட்பெய்டு கட்டணத்தினை விட, பார்தி ஏர்டெல், வோடபோன் கட்டணங்கள் 1.5 - 2 மடங்கு அதிகமாக உள்ளதாக இந்த அறிக்கைகள் கூறுகின்றன.
ஜியோவின் கட்டணங்கள் சீரான பங்கு ஆதாயங்களை காட்டினாலும், அதன் போஸ்ட்பெய்டு திட்டத்தில் விலை அதிகரிக்கப்படவில்லை.
இதே ஜியோவுடன் ஒப்பிடும்போது பார்தி ஏர்டெல், வோடபோன் போஸ்ட்பெய்டு கட்டணங்கள் அதிகமாக இருப்பதையே பார்க்க முடிகிறது.
இதே பார்தி ஏர்டெல் தனது பொஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களை அதிகரித்துள்ள அளவிற்கு, வோடபோனுக்கு அதிகரிக்க வில்லை என்றே கூறலாம்.
இதேபோல வருவாய் வாடிக்கையாளர்களை அதிகரித்து வருவதில் ஜியோ, பார்தி ஏர்டெல் முன்னிலை வகித்து வருகிறது. சந்தை இது இரு நிறுவனங்களுக்கு சாதகமாகவே இருந்து வருகிறது.
அதிலும் ஜியோ மிக மலிவான விலையில் போஸ்ட்பெய்டு திட்டத்தினை வழங்கி வருகீறது. குறிப்பாக 25 டேட்டா வெறும் 199 ரூபாய்க்கு தருகிறது ஜியோ.
இதே பார்தி ஏர்டெல் 4 போஸ்ட் பெய்டு திட்டங்களை வைத்துள்ளது. குறிப்பாக 499 ரூபாய் முதல் 1599 ரூபாய் வரையில் வைத்துள்ளது. மேலும் 399 ரூபாய்க்கு 40 ஜிபி டேட்டாக்களை கொடுத்து வருகிறது.
இதே வோடபோன் 30 ஜிபி டேட்டாக்களை 299 ரூபாய்க்கும் கொடுத்து வருகிறது. எப்படொய் எனினும் ஜியோவின் வருகைக்கு பின்னர் இந்த இரு நீறுவனங்களுமே நஷ்டத்தில் இயங்கி வந்தாலும், பார்தி ஏர்டெல் ஒரளவு வாடிக்கையாளர்களை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.