டெல்லி, இந்தியா: Automation பணியாளர்களை மாற்றியது இல்லை, மாறாக உற்பத்தியைப் பெருக்கி இருக்கிறது. பணியாளர்கள் நன்கு யோசித்து முடிவு எடுக்கக் கூடிய வேலைகளில் கவனம் செலுத்த உதவி இருக்கிறது Automation. எனவே Automation வந்தால் பணியாளர்களுக்கான வேலை பறி போகும் என கவலைப் பட வேண்டாம் என மக்களவையில் சொல்லி இருக்கிறார் மத்திய தொழிலாலர் நலத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்கார்.
அதோடு "புதிய தொழில்நுட்பங்களால் நிறைய வேலை வாய்ப்பு உருவாகும், உற்பத்தி அதிகரிக்கும், இதனால் திறன் படைத்த தொழிலாளர்களுக்கான தேவையும் அதிகரிக்கும் எனச் சொல்லி இருக்கிறார் சந்தோஷ் கங்வார். அதோடு இந்திய ஐடி மற்றும் ஐடி சார் தொழில் துறைகள் இப்போது வரை ஆட்களை எடுக்கும் துறையாகத் தான் இருக்கிறார்கள். ஐடி துறை சார்ந்தவர்களே ஆட்களை வேலைக்கு எடுத்து பணிக்கான பயிற்சியும் அளிப்பதாகச் சொல்லி இருக்கிறார்.

National Association of Software and Services Companies (Nasscom) இந்திய தேசிய மென்பொருள் மற்றும் சேவை சங்கத்தின் கணக்குப் படி கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் 41.38 லட்சம் பேர் ஏற்கனவே வேலையில் இருந்திருக்கிறார்கள். மேற் கொண்டு 1.7 லட்சம் ஊழியர்களை வேலைக்கு எடுத்திருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
ஐடி துறையில் பணியாளர்களின் திறனை மேம்படுத்த ஒரு தனி திட்டத்தை National Association of Software and Services Companies (Nasscom), ஐடி துறை மற்றும் கல்வியாளர்களோடு, அரசு பேசி வருகிறதாம். இந்த திட்டத்தை அரசு முன்னிருந்து ஒருங்கிணைக்கப் போவதாகவும் சொல்லி இருக்கிறார் சந்தோஷ் கங்கார். இந்த திட்டத்தின் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 20 லட்சம் ஐடி ஊழியர்களின் திறனை மேம்படுத்த இலக்கு வைத்திருக்கிறார்களாம்.
இந்த ஐடி ஊழியர்கள் திறன் மேம்பாட்டு திட்டத்துக்காக, ஏற்கனவே National Association of Software and Services Companies (Nasscom) மற்றும் மத்திய எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் ஒரு (MoU - Memorandum of Understanding) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருக்கிறார்களாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications