மும்பை : மும்பையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு மத்திய அரசும், மஹாராஷ்டிரா அரசும் இணைந்து மும்பை சென்ட்ரல் மற்றும் பாந்த்ரா இடையேயான மெட்ரோ திட்டத்தை தொடங்கியது.
இந்த நிலையில், ஏர் கண்டிஷனிங் மற்றும் வணிக குளிர்பதன நிறுவனமான, புளு ஸ்டார் லிமிடெட் கடந்த செவ்வாய் கிழமையன்று, மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 253 கோடி ரூபாய் மதிப்புள்ள ஏர் கண்டிஷனிங் மற்றும் சுரங்கப்பாதை காற்றோட்டம் அமைப்பு குறித்தான ஆர்டரை பெற்றுள்ளதாம்.

மும்பை சென்ட்ரல் மற்றும் பாந்த்ரா இடையேயான பாதையில் 9 நிலத்தடி நிலையங்களுக்கான வடிவமைப்பு, பொறியியல், சப்ளை, இன்ஸ்டாலேஷன் மற்றும் ஏர் கண்டிஷனிங், சுரங்கப்பாதை காற்றோட்டம், சுற்றுச் சூழல் கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளிட்ட பணிகள் இந்த ஆர்டரில் அடங்கியுள்ளனவாம்.
மேலும் MMRCL என்பது மத்திய அரசுக்கும், மஹாராஷ்டிரா அரசுக்கும் இடையிலான ஒரு கூட்டு முயற்சியாகும். மேலும் இந்த திட்டம் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தால் ஓரளவு நிதியளிக்கப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் Colaba-Bandra-SEEPZ என்றும் அழைக்கப்படுகிறது. இது நாட்டிலேயே மிக நீண்ட தொடர்ச்சியான நிலத்தடி மெட்ரோ ரயில் பாதை கொண்ட திட்டம் என்றும் கூறப்படுகிறது.
மும்பையில் விண்வெளி தடைகள் அதிகம் இருப்பதால், இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள மெட்ரோ ரயில் அமைப்புகளுடன் ஒப்பிடும்போது. ஒவ்வொரு நிலைய அமைப்பும் மிகச் சிறியதாகவே இருக்கிறதாம்.
இதன் காரணமாகவே கணினி வடிவமைப்பு, அளவிடுதல் மற்றும் சாதனங்களின் இடம் ஆகியவை வரையறுக்கப்பட்ட இடத்திற்குள் நிர்வகிக்கப்பட வேண்டும் என்றும் கருதப்படுகிறது.
இந்த நிலையில் இது புளு ஸ்டார் நிறுவனம் அதன் பொறியியல் வலிமையை நிரூபிக்க இது சரியான திட்டம் என்றும், மேலும் சரியான நேரத்தில் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக, பல சிக்கலான திட்டங்களை செயல்படுத்த, புளூ ஸ்டார் நிறுவனம் நன்கு தயாராக உள்ளது என்றும் ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications