டெல்லி: கடந்த 2018 - 19 நிதி ஆண்டில், இந்திய Railways நிர்வாகம் 140 கோடி ரூபாயை வெறும் ப்ளாட்ஃபார்ம் டிக்கெட்களை விற்றே வருவாய் ஈட்டி இருப்பதாக ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் நேற்று (ஜூலை 26, 2019, வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார்.
அதோடு பாராளுமன்ற மேலவையான ராஜ்யசபாவில் பேசிய பியுஷ் கோயல், கடந்த 2018 - 19 நிதி ஆண்டில், இந்திய ரயில் நிலையங்களிலும், ரயில் நிலையங்களில் இருக்கும் கடைகளில் போட்ட விளம்பரங்கள், ப்ளாட்ஃபார்ம்களில் இருக்கும் கடைகளில் போடும் விளம்பரங்கள் வழியாக சுமார் 230 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்.

தற்போது இந்திய Railways நிர்வாகத்தில் இருக்கும் கொள்கைகள் படி, ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்வே ப்ளாட்ஃபார்ம்களில் இயங்கும் கடைகளை நடத்த திறந்த ஏலம் நடத்தி, உரிமங்களை வழங்கி இருக்கிறார்களாம். அதே போல, ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்வே ப்ளாட்ஃபார்ம்களில் விளம்பரம் செய்யவும் திறந்த ஏலம் நடத்தி உரிமங்களை வழங்கி இருக்கிறார்களாம்.
ஆகையால் என்ன விலைக்கு கடைகளை நடத்தவும், விளம்பரங்களைச் செய்து கொள்ளவும் உரிமங்கள் வழங்கப்பட்டது, ஏலம் கொடுக்கப்பட்டது எனச் சொல்வது சரியாக இருக்காது என பாராளுமன்ற மேலவையில் சொல்லி இருக்கிறார் மத்திய ரயில்வே, வணிகம் & தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல்.
ரயில் நிலையங்களில் கடை நடத்தவும் விளம்பரம் செய்து கொள்ளவும், ஒரு குறைந்த பட்ச உரிமத் தொகையை முதலில் முடிவு செய்து விடுகிறார்களாம். அப்போது தான் Railways-க்கு ஒரு குறிப்பிட்ட தொகை குறைந்தபட்ச வருமானம் வந்து கொண்டே இருக்குமாம். அதன் பிறகு தான் ஒரு திறந்த ஏலம் நடத்தப்பட்டு தொகையை நிர்ணயித்து விளம்பரம் செய்யவும், கடைகளை நடத்தவும் உரிமங்களைக் கொடுப்பதாகச் சொல்லி இருக்கிறார் மத்திய ரயில்வே, வணிகம் & தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல்.
இதை எல்லாம் இழுத்துப் பிடித்து சிறப்பாக செய்யும் இதே அமைச்சர் தான், இந்திய ரயில்வேயை தனியார் மயமாக்குவதிலும் அத்தனை அவசரம் காட்டுகிறார் என்பது தான் கொஞ்சம் திடுக்கிட வைக்கும் செய்தியாக இருக்கிறது. ஏற்கனவே தனியாருக்கு தாரை வார்க்க ஒரு ரயிலைத் தயார் செய்துவிட்டார்கள். இன்னொரு ரயிலைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications