டெல்லி : கடந்த ஆண்டு இதே காலாண்டில் நஷ்டத்தில் இருந்த ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, தற்போது நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் நிகரலாபம் 1,908 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஆமாங்க. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் கடந்த 2018 - 2019ம் நிதியாண்டில் 119.55 கோடி ரூபாய் நஷ்டத்தை கண்ட இந்த வங்கி, தற்போது இந்த அளவு நிகர லாபத்தை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆமாங்க.. கடந்த ஆண்டை விட தற்போது வாராக்கடன் குறைந்துள்ளதோடு, சொத்து மதிப்பும் அதிகரித்துள்ளது. இதனால் இந்த நிறுவனத்தின் முதல் காலாண்டின் நிகரலாபமும், வருவாயும் அதிகரித்துள்ளது.
இதே ஜூன் 30 வுடன் முடிவடைந்த இந்த காலாண்டில், இந்த வங்கியின் வருவாய் 15.24 சதவிகிதம் அதிகரித்து, 21,405.50 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே இதற்கு முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 18,574.14 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த வங்கியின் நிகர வட்டி வருவாய் 27 சதவிகிதம் அதிகரித்து, 7,737 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய நிதியாண்டின் முதல் காலாண்டில் 6,102 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
மேலும் நிகர வட்டி வரம்பு இலாபம் 3.19 சதவிகிதத்திலிருந்து, 3.61 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது. இதே இதர வருவாய்கள் 15.74 சதவிகிதம் வீழ்ச்சிகண்டு, 3,851 கோடி ரூபாயிலிருந்து குறைந்து, 3,425 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
ஜூன் மாத காலாண்டில் அடிப்படையில் மொத்த வாராக்கடன் 8.81 சதவிகிதத்திலிருந்து, 6.49 சதவிகிதமாக குறைந்துள்ளது.
இதிக் கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது வாராக்கடன் அளவு 41.4 சதவிகிதம் குறைந்து 3,495.73 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 5,971.29 கோடி ரூபாயாக இருந்தது.
செயல்படாத சொத்துகளின் மதிப்பும் 45,763.08 கோடி ரூபாயாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே வாராக்கடன் மதிப்பு 51 சதவிகிதம் குறைந்து,11,857 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் 24,170 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆமாங்க.. கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 4.67 சதவிகிதமாக இருந்த வாராக்கடன், தற்போது 1.98 சதவிகிதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாரக்கடன் குறைப்பே நிகரலாபம் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.