ஒரு கிலோ தேயிலை 50,000 ரூபாயா.. 24 கேரட் தங்கத்தவிட விலை அதிகமா இருக்கேப்பா.. அப்படி என்ன ஸ்பெஷல்?

கவுஹாத்தி : நாளுக்கு நாள் மக்களிடையே டீயின் மோகம் அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்த நிலையில், மிகவும் அரிய வகை தேயிலையான மனோகரி கோல்டு தேயிலை ரகம், 24 காரட் தங்கத்தை விட அதிகமாக ஏலம் போயுள்ளது.

ஆமாங்க.. ஒரு கிலோ மனோகரி கோல்டு தேயிலை கிலோ 50,000 ரூபாயாக ஏலம் போயுள்ளது.

இந்த அரிய வகை, தனித்தன்மை வாய்ந்த மனோகரி கோல்ட் தேயிலை ரகம் இந்த ஆண்டு ஒரு கிலோ 50,000 ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த ஆண்டு இந்த தேயிலை 39,000 ரூபாய்க்கு ஏலம் போன நிலையில், இந்த ஆண்டு தான் மிகவும் அதிகபட்ச விலைக்கு ஏலம் போனது என்றும் கூறப்படுக்கிறது.

அரிய வகை தேயிலை, அதிக விலைக்கு ஏலம்!

அரிய வகை தேயிலை, அதிக விலைக்கு ஏலம்!

இந்தியாவில் தேயிலை உற்பத்தி முதலிடத்தில் இருக்கும் அசாம் தேயிலை தோட்டத்தில் பயிராகும் இந்த அரிய வகை தேயிலை தான், கவுஹாத்தியில் நடைபெற்ற தேயிலை ஏல மையத்தில் கடந்த புதன் கிழமையன்று அதிகபட்ச விலைக்கு ஏலம் போனதாகவும் கூறப்படுகிறது. இந்த விலையே இதுவரை ஏலம் போனதில் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

அதிக விலைக்கு ஏலம் போனது இதுவே முதல் முறை

அதிக விலைக்கு ஏலம் போனது இதுவே முதல் முறை

தங்க இலை சருகு போன்ற இந்த கருப்பு கலரான இந்த தேயிலை ரகம் கடந்த ஆண்டு, ஒரு கிலோ ரூ. 39,000 ரூபாய்க்கு ஏலம் போனது. மேலும் அருணாசலப் பிரதேசத்தில் உள்ள டோன்யி போலோ டீ எஸ்டேட் ரகம் 40,000 ரூபாய்க்கும் ஏலம் போனது.ஆனால் இவ்வாறு நடத்தப்பட்ட பொது ஏலங்களில் ஒரு கிலோ 50 ஆயிரம் ரூபாய்க்கு செல்வது இதுவே முதல் முறை என்றும், கவுஹாத்தி தேயிலை ஏலமையத்தின் செயலர் தினேஷ் பிஹானி தெரிவித்துள்ளார்.

மொத்த உற்பத்தியே 5 கிலோதான்

மொத்த உற்பத்தியே 5 கிலோதான்

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், மிகவும் அரிய வகையான இந்த தேயிலை இந்த ஆண்டு மொத்தமே 5 கிலோதான் பயிரானதாம். மேலும் இந்த தேயிலை விளைவதற்கு ஏற்ற சீதோஷ்ண நிலை இல்லாததே விளைச்சல் குறைவுக்குக் காரணமாகும். இந்த தேயிலை ரகமானது தேயிலை சிறிய மொட்டு களிலிருந்து பெறப்படுவதாகும். மேலும் அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் இந்த தேயிலை பறிக்கப்பட வேண்டுமாம். ஏனெனில் இதன் அபார சுவையையும், நறுமணத்தையும் சூரியன் தாக்கிவிடக் கூடாது என்பதால் இந்த நேரத்தில் பறிக்கப்படுவதாகவும் கூறுகிறார். இதனாலேயே இதை தயாரிப்பது மிகவும் சிரமமான விஷயம் என்றும் தினேஷ் கூறியுள்ளார்.

மொட்டுகளிலிருந்து பெறப்படும் அரிய தேயிலை

மொட்டுகளிலிருந்து பெறப்படும் அரிய தேயிலை

பொதுவாக தேயிலையானது இலைகளில் இருந்து பெறப்படுவது. ஆனால் இந்த ரக தேயிலை அதன் மொட்டுகளிலிருந்து பெறப்படுவது என்றும், இவ்வாறு பெறப்பட்டதில், கடந்த ஆண்டு இந்த ரக தேயிலையை 2 கிலோ மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டதாகவும், எனினும் இந்த ஆண்டு 5 கிலோ உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும், மனோஹரி தேயிலை தோட்ட அதிபர் ராஜன் லோஹியா தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+