இவ்வளவு அபராதமா.. அதுவும் பொதுத்துறை வங்கிகளுக்கா.. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் அக்கவுன்ட் பிரச்சனையா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : இவ்வளவு அபராதமா.. அதுவும் பொதுத்துறை வங்கிகளுக்கா? எதுக்கு என்று கேட்கிறீர்களா? கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் அக்கவுன்ட் தொடர்பான விவரங்களை அளிக்க சில பொதுத்துறை வங்கிகள் தாமதப்படுத்தியதால் இந்த அபாராத தொகையினை விதித்துள்ளதாம் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா.

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் அக்கவுன்ட்டில் மோசடி செய்யப்பட்டுள்ள கணக்குகளை, வங்கிகள் கொடுக்க தாமதப்படுத்தியதையடுத்து, ரிசர்வ் வங்கி இப்படி ஒரு அதிரடியான, முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வளவு அபராதமா.. அதுவும் பொதுத்துறை வங்கிகளுக்கா.. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் அக்கவுன்ட் பிரச்சனையா?

அதிலும் குறிப்பாக ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கிக்கு 1 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு, மோசடிகள் தொடர்பாக புகார் அளிக்காததால் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.

மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு, கிங்க்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மோசடிகளை ரிசர்வ் வங்கிக்கு கூற தாமதப்படுத்தியாக, இந்த வங்கிக்கு 50 லட்சம் ரூபாய் அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

ஆமாங்க.. கிங்க்ஃபிஷர் ஏர்லைன்ஸ் தொடர்பான மோசடி குறித்த அறிக்கையை 2018ம் ஆண்டு ஜூலை10ம் தேதி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ரிசர்வ் வங்கிக்கு தெரிவித்தது. இந்த அறிக்கையானது மிக காலதாமதமாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், வங்கி ஒழுங்கு முறை சட்டம் 1949ன் கீழ் தாமதமாக தெரிவித்தற்காக இந்த அபராதம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதே போல் பாங்க் ஆப் பரோடாவுக்கும் மோசடிகளை கால தாமதாமாக தெரிவித்ததற்காக 50 லட்சம் ரூபாய் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அபாராத தொகைகள், 14 நாட்களுக்குள் கட்ட வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அலகாபாத் பேங்க், பேங்க் ஆப் மஹாராஷ்டிரா வங்கிகளுக்கு தலா 2 கோடி ரூபாயும், பேங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளுக்கு 1.5 கோடி ரூபாய் அபாராதமும் விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கிக்கு 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் படி இந்திய ரிசர்வ் வங்கி 7 பொதுத்துறை வங்கிகளிடம், 11 கோடி ரூபாய் அபராதமாக விதித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI has imposed upto Rs 2 crore fine on some public sector Banks

RBI has imposed upto Rs 2 crore fine on some public sector Banks
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X