மும்பை : அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிகழ்ந்து வரும் வர்த்தக போரால், சர்வதேச அளவில் பொருளாதாரம் மந்த நிலையில் காணப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவுக்கு என்னவோ அது நல்ல விஷயமாகவே அமைகிறது.
ஆமாங்க.. அமெரிக்கா - சீனா பிரச்சனை மீண்டும் துளிர் விட ஆரம்பித்துள்ளது, இந்த நிலையில் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், சீனாவின் 300 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்களுக்கு 10 சதவிகித வரியை அதிகரிக்க போவதாக கூறியுள்ளார்.

இந்த வரி அதிகரிப்பு வரும் செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரலாம் என்றும் கூறப்பட்டுள்ள நிலையில், சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி பொருட்கள் விலையும் இன்னும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சீனா அரசு இது குறித்து எந்த விதமான திருப்திகரமான காரணங்களையும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் இதனால் இப்போதைக்கு அமெரிக்கா சீனா வர்த்தக ஒப்பந்தத்துக்கு சாதகமான சூழலும் இல்லை. இதனால் இந்த இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனை மேலும் வலுவாகி கொண்டே போகிறது. எனினும் இந்த இரு நாடுகளின் நட்பு நாடான இந்தியாவுக்கு இது சாதகமான வாய்ப்பாக அமைய பல வாய்ப்புகள் உள்ளதாக பல கருத்துகள் நிலவி வருகின்றன.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கடினமான மற்றும் மெருகூட்டப்பட்ட வைரங்கள், கடினமான மற்றும் மெருகூட்டப்பட்ட செயற்கை ரத்தின கற்கள், விலை மதிப்பற்ற அல்லது மதிப்பற்ற கற்கள் பதித்த நகைகளுக்கும் இந்த கட்டண அதிகரிப்பு பொருந்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நியூயார்க்கில் வைர ஆய்வாளரும் ஆலோசகருமான பால் சிம்னிஸ்கி, அமெரிக்கா சீனாவிலிருந்து ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான மெருகூட்டப்பட்ட வைரங்களை இறக்குமதி செய்கிறது. இதன் மூலம் 15 சதவிகித வரிகள் தொடர்ந்தால், இது அமெரிக்கா சில்லறை விற்பனையாளர்களை வெகுவாக பாதிக்கும். ஏனெனில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும்.
இதனால் அமெரிக்கா சில்லறை விற்பனையாளர்கள், இந்தியாவில் இருந்து வடிவமைக்கப்பட்ட நகைகளை வாங்குவதற்கு இது வழிவகுக்கும். அமெரிக்காவின் இந்த வரி உயர்வு உண்மையில் செயல்படுத்தப்பட்டால், அமெரிக்காவிற்கு சீனாவின் தங்க நகை ஏற்றுமதி என்பது சாத்தியமில்லாத ஒரு விஷயமாக இருக்கும்.
மேலும் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே உள்ள இந்த இடைவெளியை நிரப்ப இந்திய ஏற்றுமதியாளர்கள் ஒரு வாய்ப்பு பெறுவார்கள் என்றும் சிம்னிஸ்கி கூறியுள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?



Click it and Unblock the Notifications