இந்தியாவின் முன்னணி தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் உற்பத்தி நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் புதிய கூட்டணி அமைத்துள்ளது.
இப்புதிய கூட்டணியின் மூலம் இந்தியாவில் புதிதாக 5500 பெட்ரோல் பங்குகளைத் திறந்து மக்களுடன் நேரடியாக வர்த்தகம் செய்ய முடிவு செய்துள்ளார் முகேஷ் அம்பானி.
கூட்டணி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்தியாவில் தனது ரீடைல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையை அதிகரிக்கப் பிரிட்டன் BP நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளது.
இக்கூட்டணி புதிய நிறுவனத்தைத் துவங்கி அதன் கீழ் இந்தியா முழுவதும் பெட்ரோல் பங்குகளைத் திறக்கவும், இந்தியாவில் இருக்கும் விமான நிறுவனங்களுக்குச் சில்லறை விற்பனை முறையில் விமான எரிபொருளை விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளது.
இணைப்பு
ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனத்தின் கீழ் 1400 பெட்ரோல் பங்குகளும், 31 விமான எரிபொருள் நிலையங்கள் இருக்கும் நிலையில், இவை அனைத்து புதிய கூட்டணி நிறுவனத்தில் இணைக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
இப்புதிய வர்த்தக விரிவாக்கத்தின் மூலம் இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை எரிபொருள் வியாபாரம் சூடுப்பிடிக்க உள்ளது.
பங்கீடு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் BP கூட்டணியில் உருவாகும் புதிய நிறுவனத்தில் 49 சதவீத பங்குகள் BP கட்டுப்பாட்டிலும், 51 சதவீத பங்குகள் ரிலையன்ஸ் நிறுவன கட்டுப்பாட்டிலும் இருக்கும்.
மேலும் இக்கூட்டணி நிறுவனம் அடுத்த 5 வருடத்தில் நாட்டின் முக்கியமான வர்த்தகப் பகுதிகளில் சுமார் 5500 பெட்ரோல் பங்குகள் அமைக்கப்பட உள்ளது.
ஆரம்கோ
குஜராத் ஜாம்நகர் பகுதியில் இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் இரு பெரிய எண்ணெய் சுத்திகரிப்புத் தளத்தில் சவுதி ஆரம்கோ முதலீடு செய்யப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், பேச்சுவார்த்தைக்குத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு பிரிட்டன் BP நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
முதலீடு
ஆரம்கோ ரிலையன்ஸ் நிறுவன சுத்திகரிப்பு தொழிற்சாலையின் 25 சதவீத பங்குகளைக் கைப்பற்ற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுமட்டும் அல்லாமல் ஆரம்கோ நிறுவனமே இந்தியாவில் நேரடியாகப் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யும் வகையில் சில்லறை சந்தையில் இறங்கவும் முடிவு செய்துள்ளது.
இதற்காகவும் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி உடன் ஆராம்கோ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பெட்ரோல் பங்க்
இந்தியாவில் சுமார் 65000 பெட்ரோல் பங்க்-கள் உள்ளது, அதில் 58,174 பங்குகளைப் பொதுத்துறை நிறுவனங்கள் வைத்துள்ளது. மீதமுள்ளவை தான் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமானது.
இதில் ரஷ்ய நிறுவனமான Nayara Energy-யின் எஸ்ஸார் பெட்ரோல் பங்குகள் எண்ணிக்கை 5244, இதை அடுத்த 3 வருடத்தில் 7000ஆக உயர்த்த திட்டமிட்டு வருகிறது. ஷெல் நிறுவனம் இந்தியாவில் 151 கிளைகளை வைத்து வர்த்தகம் செய்து வருகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications