டெல்லி : கார் உற்பத்தி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனம், தொடர்ந்து ஆட்டோமொபைல் துறையில் நிலவி வரும் மந்த நிலையால், தனது உற்பத்தியை தொடர்ந்து ஆறாவது முறையாக குறைத்துள்ளது.
ஏற்கனவே விற்பனை மந்தம், பொருளாதார வீழ்ச்சியினால் பல ஊழியர்களைக் வீட்டுக்கு அனுப்பிய இந்த நிறுவனம், இந்த உற்பத்தி குறைப்பால், மேலும் பல ஊழியர்கள் வீட்டுக்க்கு அனுப்ப படலாம் என்ற கவலையும் நிலவி வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதத்தில், 25.15 சதவிகித உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே ஆட்டோமொபைல் துறை மந்தமாக இருந்து வரும் நிலையில், இரு சக்கரம் மற்றும் கார்கள், பயணிகள் வாகன விற்பனை வெகுவாக சரிந்துள்ளது. இந்த நிலையில் இதனை தயாரிக்கும் நிறுவனங்களும் தொடர்ந்து உற்பத்தியை குறைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அதிலும் கார்கள் விற்பனையில் சுமார் 40 சதவிகித பங்களிப்புக்கும் மேல் கொண்டுள்ள மாருதி நிறுவனம் தொடர்ந்து ஆறாவது முறையாக கடந்த ஜூலை மாதத்தில் உற்பத்தியை குறைத்துள்ளது.
மேலும் இந்த நிறுவனம் கடந்த ஜூலை மாதத்தில் 1,33,625 வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்துள்ளது. இதே கடந்த ஆண்டு இதே மாதத்தில் 1,78,533 வாகனங்கள் உற்பத்தி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே பயணிகள் வாகனம் உற்பத்தி கடந்த ஜூலை மாதத்தில் 1,30,541 ஆக இருந்தது. இதுவே கடந்த ஜூலை 2018ல் 1,75,456 ஆக இருந்துள்ளது.
இதுவே சிறிய ரக கார்களின் உற்பத்தியானது, குறிப்பாக ஆல்டோ, நியூ வேகன் ஆர், செலிரியோ, ஸ்விப்ட் உள்ளிட்ட பல வாகனங்கள் உற்பத்தி 95,733 ஆக குறைந்துள்ளது. இதுவே 2018 ஜுலை மாதம் 1,27,715 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுவே நடுத்தர அளவிலான சேடான் சியாஸ் உள்ளிட்ட வாகனங்கள் உற்பத்தியும், கடந்த ஜூலை மாதத்தில் 3,497 ஆக குறைந்துள்ளது. இதுவே கடந்த 2018 ஜுலையில் 7,115 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுவே வர்த்தக வாகனங்கள் உற்பத்தியானது, கடந்த ஜூலை மாதத்தில் 2,724 ஆக குறைந்துள்ளது. இதுவே கடந்த 2018ம் ஆண்டு இதே மாதத்தில் 3,077 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 10 ரூபாய் குறைந்து 5,768 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.