இந்தியா சுதந்திரம் அடைந்த நாள் முதல் இன்று வரை தீராமல் இருக்கும் காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கில் மோடி அரசு வழக்கம் போல் அவசர அவசரமாகக் காஷ்மீர்-க்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கியுள்ளது.
இதனை அடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட உள்ளது.
மக்கள் போராட்டம்
இதனிடையில் இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் போராட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளியன்று வீதிகளில் திரண்ட நிலையில், அங்குப் பரபரப்பான சூழ்நிலையில் உருவாகி மக்கள் பீதியிலிருந்தனர். ஆனால் ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் தற்போது வந்துள்ளதால் அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளதாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1000 கோடி ரூபாய்
இப்படிப் பிரச்சனை ஒருபக்கம் இருக்கும் நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் காஷ்மீரில் 1000 கோடி ரூபாய் முதலீடு செய்யத் தான் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். இவரின் அறிவிப்பு வர்த்தகச் சந்தையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜிந்தர குப்தா
லூதியானா தலைமையிடமாகக் கொண்டு வர்த்தகம் செய்யும் டிரைடென்ட் குரூப் நிறுவனத்தின் தலைவரான ராஜிந்தர குப்தா காஷ்மீரில் தான் 1000 கோடி ரூபாய் வரையில் முதலீடு செய்ய புதிய வர்த்தகம் துவங்கத் தயாராக இருப்பதாகப் பிரபல செய்தி ஊடகத்திற்குப் பேட்டி அளித்துள்ளார்.
மக்கள்
இந்த வீடியோ காட்சி தற்போது இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. வீடியோவை பார்த்த பலர் இன்னும் மக்கள் இயல்பு நிலைக்குக் கூடத் திரும்பாத நிலையில், காசு பணமென்று பேசுவது எல்லாம் தப்பு எனக் குறைகூறி வருகின்றனர். மறுபுறம், 370 நீக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பலர் ராஜிந்தர குப்தா-வின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துப் பாராட்டி வருகின்றனர்.
சிறு, குறு தொழில்
இதுகுறித்து ராஜிந்தரக் குப்தா கூறுகையில், தற்போதைய நிலையில் காஷ்மீரில் பெரிய அளவிலான வர்த்தகம் எல்லாம் எதுவும் செய்ய முடியாது, ஆனால் சிறு, குறு தொழில் பிரிவுகளில் பல வகையான வர்த்தகத்தைப் பாகிஸ்தானில் துவங்கலாம். இதேபோல் விருந்தோம்பல் துறையில் அதிக வர்த்தகத்தைப் பெற வாய்ப்பு உள்ளதாகவும் ராஜிந்தரத் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications