டெல்லி: ஒரு புறம் ராக்கெட் வேகத்தில் வெள்ளி மற்றும் தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் இதுவரை ஆமை வேகத்தில் இருந்த வெள்ளியின் விலை இன்று தடாலென ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் அதிகரித்துள்ளது.
ஆமாங்க.. ஒரு புறம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உச்சத்தை தொட்டுக் கொண்டிருந்தாலும், மறுபுறம் ஆபரண தங்கத்தின் விலையுக் கூடிக் கொண்டே போகிறது.
இந்த நிலையில் தங்கம் வெள்ளி விலையானது, இதுவரை இல்லாத அளவுக்கு, உயரத்தை தொட்டுள்ளது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் வெள்ளியின் விலையானது 2,000 ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய சந்தையில் விலை இப்படித்தான்?
இந்த நிலையில் மல்டி கமாடிட்டி சந்தையில், 10 கிராம் தங்கத்தின் விலையானது 38,666 ரூபாய் சென்று, தற்போது 38,577 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது வரலாறு காணாத உச்சமாகும். இதுவே வெள்ளியின் விலை 45,916 ரூபாய் வரை சென்ற வெள்ளியின் விலையானது, தற்போது 45,845 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலையில் ஸ்பாட் சந்தையிலும் வெள்ளியின் விலை தாறுமாறாக ஏற்றம் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
வெள்ளி தேவை அதிகரிப்பு
மேலும் வெள்ளி காயின்களுக்கு நல்ல தேவையும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த காயிங்களுக்கான விலையும் ஒரே நாளில் அதிரடியாக அதிகரித்துள்ளதாம். மேலும் ஆவணி மாதத்தில் இந்தியாவை பொறுத்தவரை அதிகப்படியான முகூர்த்த தினங்கள் இருக்கும் நிலையில், வெள்ளிக்கான தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாளில்100 காயின்களுக்கு விலை ரூ.1000 அதிகம்
ஆமாங்க.. பொதுவாக நூறு காயின்களை விலை 89,000 ரூபாய் என்ற விலைக்கு விற்பனையாகி வந்த நிலையில், இன்று 90,000 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஸ்பாட் மார்கெட்டில் 10 கிராம் தங்கத்தின் விலை 38,470 ரூபாயை தொட்டுள்ளது. இதுவே வெள்ளியின் விலை 2000 ரூபாய் அதிகரித்து, கிலோவுக்கு 45,000 ரூபாயாக வர்த்தகமாகியுள்ளது.
டாலரில் எப்படி?
இதே சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸூக்கு 1 சதவிகிதம் அதிகரித்து, 1,532.35 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இது இன்று காலையில் 1545.95 டாலர் வரை சென்று திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவே வெள்ளியின் விலையும் இதே போல் கிட்டதட்ட 1.65 சதவிகிதம் அதிகரித்து, தற்போது 17.358 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இது இன்று காலை 17.588 டாலர் வரை சென்று திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏற்றத்திற்கு என்ன காரணம்?
பொதுவாவே ஒரு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது, அந்த நாட்டில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜப்பானின் யென் மதிப்பும், அமெரிக்கா பொருளாதாரமும் வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், நல்ல லாபத்தை தரும் பாண்டுகளில் தற்போது வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், முதலீட்டாளர்கள் மத்தியில், தற்போது தங்கம் சிறந்த முதலீடாக உள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இவ்வாறு தாறுமாறாக ஏறிக் கொண்டிருக்கிறது என்றும் கூறலாம்.
இந்திய ரூபாயும் ஒரு காரணம்
இந்தியாவைப் பொறுத்தவரை டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 61.40 ரூபாயாக சரிந்து காணப்படுகிறது. இந்த நிலையில் இது இந்திய சந்தைகளில் தங்கம் விலை ஏற்றத்திற்கு இன்னும் வழி வகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இப்படி விலை அதிகரிப்பதால், அடித்தட்டு மக்களுக்குதான் மிகப்பெரிய பிரசனையை கொண்டு வருகின்றது. ஏனெனில் தங்கம் வாங்க முடியாதவர்கள், வெள்ளியிலாவது வங்கிக் கொள்ளலாம் என்ற பட்சத்தில், தற்போது வெள்ளியின் விலையும் ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.