டெல்லி : இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே தொடர் சரிவை கண்டு வரும் ஆட்டோமொபைல் துறை, கடந்த ஜூலை மாதத்தில் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 19 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த டிசம்பர் 2000லிருந்து ஒப்பிடும்போது 21.8 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பயணிகள் வாகன விற்பனையானது 31 சதவிகிதம் குறைந்து, 2,00,790 யூனிட்களாக குறைந்துள்ளது. இதுவே கடந்த டிசம்பர் 2000ம் ஆண்டிலிருந்து ஒப்பிடும்போது 35.22 சதவிகிதம் குறைந்துள்ளது.
விற்பனை வீழ்ச்சி
அதிலும் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனம், தனது உற்பத்தியை செயற்கையாகவே நிறுத்தியது காரணம், குர்கான் அடிப்படையாகக் கொண்ட இந்த நிறுவனத்தில் ஊழியர்கள் அமைதியின்மையால் முடங்கியது. இந்த நிலையில் பயணிகள் விற்பனை 9 மாதங்களில் வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலையில் வர்த்தக வாகன விற்பனையும் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. மொத்தத்தில் ஒட்டுமொத்த விற்பனையும் சரிந்துள்ளதால், ஒட்டுமொத்த வாகன விற்பனையும் 25.71 சதவிகிதம் சரிந்து காணப்படுகிறது. இதே போல் இரண்டு சக்கர வாகன விற்பனையும் 16.8 சதவிகிதமும், மோட்டார் சைக்கிள் விற்பனையும் 19 சதவிகிதமும் ஸ்கூட்டர் விற்பனை 12 சதவிகிதமும் வீழ்ச்சியடைந்தும் காணப்படுகிறது.
பயணிகள் வாகன விற்பனை வெகுவாக வீழ்ச்சி!
கடந்த ஏப்ரல் முதல் ஜூலை 2019ம் ஆண்டு வரையில், ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் விற்பனையானது 14 சதவிகிதம் குறைந்து, 7,910,554 ஆக குறைந்துள்ளது. இதே கடந்த ஆண்டு இதே காலத்தில் பயணிகள் வாகன விற்பனையானது, 21.56 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, 9,13,410 ஆக குறைந்துள்ளது. இதுவே வர்த்தக வாகன விற்பனை 13.57 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு 2,65,164 வாகனங்களாக குறைந்துள்ளது. இதுவே இரண்டு சக்கர வாகன விற்பனையானது 13 சதவிகிதம் குறைத்து, 6,525,763 ஆக குறைந்துள்ளது.
பல லட்சம் வேலைகள் காலியாகலாம்!
ஒட்டு மொத்த பொருளாதாரமும் மந்த நிலையில் இருப்பதும், வாடிக்கையாளர்கள் செண்டிமென்டும் சாதகமான மனநிலையில் இல்லாததால், கடந்த 18 மாதங்களில் மட்டும், இது வரை 280 டீலர்ஷிப்கள் மூடப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிபுனர்கள், ஆட்டோமொபைல் துறையில், இதே நிலை தொடர்ந்தால் அடுத்த சில மாதங்களில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் இழக்கப்படலாம் என்றும் கூறியுள்ளார்.
ஜி.டிபியில் முக்கிய பங்கு
மொத்தத்தில் இந்தியாவில் 119 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆட்டோமொபைல் துறை, 37 மில்லியன் மக்களை மறைமுகமாகவோ அல்லது நேரிடையாகவோ ஆதரித்து வருகிறது. இந்த நிலையில் ஒட்டுமொத்த உற்பத்தியில் 49 சதவிகிதம் வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆட்டோ மொபைல் துறையில் ஏற்படும் ஒட்டுமொத்த வீழ்ச்சியானது, ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் எதிரொலிக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.
More From GoodReturns

கச்சாஎண்ணெய் கையிருப்பு: அமெரிக்கா, சீனா, ஜப்பான் மத்தியில் இந்தியா எங்கே நிற்கிறது?

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!



Click it and Unblock the Notifications