பெங்களுரு : முன்னாள் தொழில் அதிபரும், மிகவும் பிரபலமான Cafe Coffee Day நிறுவனத்தின் தலைவரும், கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனுமான சித்தார்த்தா, கடன் பிரச்சினையால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக, கடந்த சில வாரங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.
அந்த நேரத்தில், சித்தார்த்தாவிற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் கூறப்பட்டது. இதன் காரணமாக காஃபி டே நிறுவனருக்கு அதிகப்படியான கடன் அழுத்தம் இருந்திருக்கலாம் என்றும், அதனால் தான் சித்தார்த்தா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் காஃபி டே எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தனது நிறுவனத்தின் கடனை குறைப்பதற்காக 9 ஏக்கர் அளவுள்ள தொழில் நுட்ப பூங்காவை விற்க போவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த Coffee Day Enterprises Ltd நிறுவனம், காபி டே குழும நிறுவனங்களின் ஹோல்டிங் நிறுவனமாகும். இந்த நிலையில் இந்த நிறுவனம் சொத்தை விற்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் பலவாறாக செய்திகள் வெளியாகின.
மொத்த கடனே இவ்வளவு தான்
இதற்கெல்லாம் தற்போது பதில் கொடுக்கும் விதமாக காஃபி டே (Cafe Coffee Day) நிறுவனம் ஒர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் காபி டே நிறுவனம் தற்போது தான் கடன் பிரச்சனையிலிருந்து மீளத் தொடங்கியிருப்பதாகவும், அதோடு காஃபி டே நிறுவனத்தின் மொத்த கடன் இவ்வளவு தான் என்றும் பங்கு சந்தை அமைப்பிடம் தகவல் கொடுத்துள்ளது. அதன் படி காஃபி டே நிறுவனத்துக்கு மொத்தம் 4,970 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும், இந்தக் கடனில் 4,796 கோடி ரூபாய் பாதுகாப்பான பிணையக் கடன் பெற்றிருப்பதாகவும், 174 கோடி ரூபாய் பிணையம் இல்லாமல் வாங்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது இந்த நிறுவனம்.
இனி கடன் குறையும்
மேலும் தங்களது 9 ஏக்கர் அளவுள்ள குளோபல் வில்லேஜ் சொத்தை விற்று குறிப்பிட்ட கடனை அடைக்க இருப்பதாகவும், இதன் படி சொத்தை விற்று கடனை செலுத்துவதன் வாயிலாக, இந்த நிறுவனத்தின் கடன் 2,400 கோடி ரூபாயாக குறையும் என்றும் கூறியுள்ளது இந்த நிறுவனம். இது மட்டும் அல்ல மீதமிருக்கும் இந்தக் கடனும் விரைவில் அடைக்கப்படும் என்றும், காஃபி டே குழுமம் தெரிவித்துள்ளது.
சொத்த யார் வாங்குறாங்கா?
ஏற்கனவே இந்த நிறுவனத்திற்கு சொந்தமான, இந்த 9 ஏக்கர் நிலத்தை, தனியார் ஈக்விட்டி நிறுவனமான பிளாக்ஸ்டோன் குழுமம், Tanglin Developments Ltd நிறுவனத்திற்கு சொந்தமான (காஃபி டே குழுமம்) குளோபல் வில்லேஜ் பூங்காவை வாங்குவதாகவும் கூறப்பட்ட நிலையில், Global Village Tech Park க்கில் உள்ள இடத்திற்கு 2,600கோடி ரூபாய் முதல் 3,000 கோடி ரூபாய் வரை மதிப்பிட்டுள்ளதாம் பிளாக்ஸ்டோன் குழுமம். இதனால் காஃபி டே நிறுவனத்தின் கடன் 2,400 கோடி ரூபாயாக குறையும் என்றும் கூறப்படுகிறது.
இதுமட்டும் கடன் அல்ல இன்னும் இருக்கு
மேலும் காஃபி டே நிறுவனத்தையும், சில்லறை வர்த்தகத்தையும் கையாளும் நிறுவனமான, காஃபி டே குளோபல் நிறுவனத்திற்கும் மொத்தம் 1,097 கோடி ரூபாய் கடன் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் 1009 கோடி ரூபாய் கடன் பிணையத்துடன் பாதுகாப்பாகவும், மீதமிருக்கும் 88 கோடி ரூபாய் பாதுகாப்பற்ற கடனாகவும் கருதப்படுகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் துறையில் மட்டும் அல்லாது, லாகிஸ்டிக்ஸ் துறையிலும் குறிப்பிடத்தக்க கடன்களுடன் இருப்பதாகவும் இந்த நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக Sical Logistics நிறுவனத்திற்கு 1,488 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications