மும்பை: ஒரு பக்கம் அண்ணன் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ தொடங்கி இந்தியாவையே கலங்கடித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் மற்றொரு பக்கம் தம்பி அனில் அம்பானி அதே கம்யூனிகேஷன் துறையில் தன் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தால் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறார்.
அண்ணன் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னேறிக் கொண்டே இருக்கிறார். தம்பி அனில் அம்பானி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இருந்து கூட தூரம் விலகிக் கொண்டே இருக்கிறார். இப்போது அனில் அம்பானிக்கு இன்னொரு பலத்த அடி விழுந்திருக்கிறது.
திவால்
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் மரைன் அண்ட் ஆஃப்ஷோர் லிமிடெட் (Reliance Marine and Offshore Limited) நிறுவனம் தற்போது திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகச் சொல்லி இருக்கிறது தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தின் அலஹாபாத் கிளை. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திவால் ஆன பிறகு இப்போது அனில் அம்பானியின் இரண்டாவது நிறுவனமாக ரிலையன்ஸ் மரைன் அண்ட் ஆஃப்ஷோர் லிமிடெட் திவாலாகி இருக்கிறது.
2017-ல் விண்ணப்பம்
ரிலையன்ஸ் மரைன் அண்ட் ஆஃப்ஷோர் லிமிடெட் நிறுவனம், அனில் அம்பான்னியின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்தது. ரிலையன்ஸ் நவால் அண்ட் இன்ஜினியரிங் என்கிற நிறுவனத்தின் துணை நிறுவனமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் மரைன் அண்ட் ஆஃப்ஷோர் லிமிடெட் நிறுவனம் வாங்கிய கடன்களைக் கொடுக்கவில்லை என டெல்லியை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஐஎஃப்சிஐ என்கிற நிறுவனம் தான் கடந்த நவம்பர் 2017-ல் வழக்கு தொடுத்தது.
150 கோடி ரூபாய்
ஐஎஃப்சிஐ நிறுவனம் ரிலையன்ஸ் மரைன் அண்ட் ஆஃப்ஷோர் லிமிடெட் நிறுவனத்துக்கு 150 கோடி ரூபாய் கடன் கொடுத்து இருக்கிறதாம். இந்த கடன் தொகையைக் கொடுக்காததால் வழக்கு தொடுத்து திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகச் சொல்லி இருக்கிறார் ஐஎஃப்சிஐ நிறுவனத்தின் செயல் இயக்குநர் வி எஸ் வி ராவ். வழக்கு நடந்து கொண்டிருக்கும் காரணத்தால், ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடன் பிரச்னை குறித்து மேற்கொண்டு எந்த விஷயத்தையும் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொள்ளவில்லை ஐஎஃப்சிஐ நிறுவன தரப்பு.
மொத்தம் 1000 கோடி
அனில் அம்பானியின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ரிலையன்ஸ் மரைன் அண்ட் ஆஃப்ஷோர் லிமிடெட் நிறுவனத்துக்கு 150 கோடி ரூபாய் கடன் கொடுத்த ஐஎஃப்சிஐ நிறுவனத்தையும் சேர்த்து சுமார் 1,000 கோடி ரூபாய் கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டி இருக்கிறதாம். அதில் ஐஎஃப்சிஐ நிறுவனம் தான் அதிகபட்சமாக 150 கோடி ரூபாய் கடன் கொடுத்து சிக்கலில் சிக்கி இருக்கிறார்களாம். இப்போது தான் அனில் அம்பானி, தன் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கடன் பிரச்னையில் இருந்து கொஞ்சம் விலகி நிம்மதியாக இருந்தார். யார் கண் பட்டதோ, அடி மேல் அடி விழுந்து கொண்டே இருக்கிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?



Click it and Unblock the Notifications