மும்பை: ஒரு பக்கம் அண்ணன் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ தொடங்கி இந்தியாவையே கலங்கடித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் மற்றொரு பக்கம் தம்பி அனில் அம்பானி அதே கம்யூனிகேஷன் துறையில் தன் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தால் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறார்.
அண்ணன் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னேறிக் கொண்டே இருக்கிறார். தம்பி அனில் அம்பானி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இருந்து கூட தூரம் விலகிக் கொண்டே இருக்கிறார். இப்போது அனில் அம்பானிக்கு இன்னொரு பலத்த அடி விழுந்திருக்கிறது.
திவால்
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் மரைன் அண்ட் ஆஃப்ஷோர் லிமிடெட் (Reliance Marine and Offshore Limited) நிறுவனம் தற்போது திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகச் சொல்லி இருக்கிறது தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தின் அலஹாபாத் கிளை. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திவால் ஆன பிறகு இப்போது அனில் அம்பானியின் இரண்டாவது நிறுவனமாக ரிலையன்ஸ் மரைன் அண்ட் ஆஃப்ஷோர் லிமிடெட் திவாலாகி இருக்கிறது.
2017-ல் விண்ணப்பம்
ரிலையன்ஸ் மரைன் அண்ட் ஆஃப்ஷோர் லிமிடெட் நிறுவனம், அனில் அம்பான்னியின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்தது. ரிலையன்ஸ் நவால் அண்ட் இன்ஜினியரிங் என்கிற நிறுவனத்தின் துணை நிறுவனமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் மரைன் அண்ட் ஆஃப்ஷோர் லிமிடெட் நிறுவனம் வாங்கிய கடன்களைக் கொடுக்கவில்லை என டெல்லியை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஐஎஃப்சிஐ என்கிற நிறுவனம் தான் கடந்த நவம்பர் 2017-ல் வழக்கு தொடுத்தது.
150 கோடி ரூபாய்
ஐஎஃப்சிஐ நிறுவனம் ரிலையன்ஸ் மரைன் அண்ட் ஆஃப்ஷோர் லிமிடெட் நிறுவனத்துக்கு 150 கோடி ரூபாய் கடன் கொடுத்து இருக்கிறதாம். இந்த கடன் தொகையைக் கொடுக்காததால் வழக்கு தொடுத்து திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகச் சொல்லி இருக்கிறார் ஐஎஃப்சிஐ நிறுவனத்தின் செயல் இயக்குநர் வி எஸ் வி ராவ். வழக்கு நடந்து கொண்டிருக்கும் காரணத்தால், ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடன் பிரச்னை குறித்து மேற்கொண்டு எந்த விஷயத்தையும் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொள்ளவில்லை ஐஎஃப்சிஐ நிறுவன தரப்பு.
மொத்தம் 1000 கோடி
அனில் அம்பானியின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ரிலையன்ஸ் மரைன் அண்ட் ஆஃப்ஷோர் லிமிடெட் நிறுவனத்துக்கு 150 கோடி ரூபாய் கடன் கொடுத்த ஐஎஃப்சிஐ நிறுவனத்தையும் சேர்த்து சுமார் 1,000 கோடி ரூபாய் கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டி இருக்கிறதாம். அதில் ஐஎஃப்சிஐ நிறுவனம் தான் அதிகபட்சமாக 150 கோடி ரூபாய் கடன் கொடுத்து சிக்கலில் சிக்கி இருக்கிறார்களாம். இப்போது தான் அனில் அம்பானி, தன் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கடன் பிரச்னையில் இருந்து கொஞ்சம் விலகி நிம்மதியாக இருந்தார். யார் கண் பட்டதோ, அடி மேல் அடி விழுந்து கொண்டே இருக்கிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications