டெல்லி : இந்தியாவில் தான் பொருளாதார மந்தம், வேலையிழப்பு என்று ரவுண்டு கட்டி வரும் பிரச்சனை என்றால், லண்டனில் என்ன பிரச்சனை? அதிலும் லண்டனில் பிரச்சனை என்றாலும், அதனால் பாதிக்கப்படுவதும் நம் இந்தியர்களே. ஆக மொத்தத்தில் நம் இந்தியர்களுக்கு, அஷ்டமத்து சனி இருக்குமோ?
உலக நாடுகள் பூராவும், சுமார் 67 நாடுகளில், 3,900 கிளைகளை கொண்டுள்ளது இந்த வங்கி. எனினும் தற்போது இந்தியாவில் உள்ள அலுவலகங்களில் உள்ள பேக் ஆபிஸ் ஊழியர்களில் (back offices), 150 பேரை பணி நீக்கம் செய்துள்ளது.

பிரிட்டீஸ் கடன் வழங்குனரான ஹெச்.எஸ்.பி.சி, உலகளாவிய நடவடிக்கைகளை ஆதரிக்கும் வகையில், இந்திய அலுவலகங்களில் உள்ள 150 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக கூறியுள்ளது.
சர்வதேச அளவில் 2.38 லட்சம் ஊழியர்கள் பணி புரியும் இந்த வங்கியில், இந்த பணி நீக்கம் மிகக் குறைவானது தான் என்றும், இது மறுசீரமைப்பின் ஒரு பகுதி என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த பணி நீக்கமானது இந்தியாவில் புனே மற்றும் ஹைத்ராபாத்தில் உள்ள நிர்வாக மேலாண்மை மட்டத்தில் உள்ளது என்றும் இவ்வங்கி தெரிவித்துள்ளது.
நாட்டின் உலகளாவிய திறன் மையம் (global capability centres') என்று அழைக்கப்படும் இவ்வங்கியின் பேக் ஆபிஸ் அலுவலர்கள் மட்டும் 15,000க்கும் மேல் இருப்பர் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள, ஒரு வங்கி செய்தித் தொடர்பாளர், ஹெச்.எஸ்.பி.சி தனது வாடிக்கையாளர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் சிறந்த சேவையை வழங்க முடியும் என்பதை உறுதிப்படுத்த, தொடர்ந்து அதன் பணியாளர்களின் திறனை மதிப்பாய்வு செய்து வருகிறது.
அந்த வகையில், இது தனிப்பட்ட செயல்திறன் மற்றும் திட்டங்கள் உள்ளிட்ட பலவற்றை ஆராய்ச்சி செய்து பின்னரே, இது போன்ற முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த வேலையிழப்புகளின் எண்ணிக்கை 150 என்று கூறப்பட்டாலும், கடந்த வியாழக்கிழமையன்று கூறப்பட்ட அறிக்கையில், மொத்த வேலை இழப்புகளின் எண்ணிக்கை 200 என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த நடவடிக்கை, பல நிறுவனங்கள், பல வங்கிகள் எடுப்பது தான் என்றாலும், இந்தியாவில் நிலவி வரும் சிக்கலான பிரச்சனைகள் உள்ள இந்த நேரத்தில் எடுத்திருப்பது, மிகவும் துரதிஷ்டவசமானதே என்றும் கூறப்படுகிறது.
எப்படி எனினும் லண்டனில் தற்போதைய பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்புகளை இன்னும் பாதிக்கும் என்ற கவலைகள் நீடித்து வருகின்றனவாம். ஆக மொத்தம் இன்னும் பணி நீக்கம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!



Click it and Unblock the Notifications