மும்பை, நியூ டெல்லி: நேற்று மத்திய நிதி ஆமைச்சர் நிர்மலா சீதாரமனின் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது ஆட்டோமொபைல் துறைக்குச் சொன்ன ஊக்குவிப்புகளால், மொத்த துறையும் மேம்படும் எனச் சொல்லி இருக்கிறார்கள் ஆட்டோமொபைல் துறையின் முன்னோடிகள்.
அரசு ஆட்டோமொப்பைல் துறையின் தேவையை அதிகரிக்க, தன்னால் எவ்வளவு செய்ய முடியுமோ, அத்தனையையும் செய்டதிருக்கிறது என்கிறார் மாருதி சுசூகி நிறுவனத்தின் ஆர் சி பார்கவா. இந்தியாவின் மொத்த கார் வியாபாரத்தில் மாருதி சுசூகியின் பங்கு 50 சதவிகிதம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு வாகனப் பதிவுக் கட்டணத்தை அதிகரிப்பதையும் கைவிட்டிருக்கிறார்கள். இப்போது இந்த கட்டணம் தொடர்பான முடிவுகளை மாநில அரசுகள் கையில் தான் இருக்கிறது. இந்தியாவின் ஒன்பது மாநிலங்கள் சாலை வரியை அதிகரித்து இருக்கின்றன எனவும் சொல்லி இருக்கிறது.
இந்திய அரசு வங்கிகளில் கடன் சிக்கல்களை குறைக்க, வளர்ச்சியை அதிகரிக்க, ஒரு வாகனம் வாங்க தேவையான பணத்தை துறையில் குறைத்தது போன்ற மாற்றங்கள் இந்திய ஆட்டோமொபைல் துறை மீண்டும் பழைய நிலைக்கு வர உதவ வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார் ட்டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் குண்டர் புட்ஸே.
இந்திய ஆட்டோமொபைல் துறையை மேம்படுத்த, வாகனங்களூக்கான தேய்மானத்தை 15 சதவிகிதம் அதிகரித்தது, அரசுத் தரப்பினர்கள் வாகனங்களை வாங்க இருந்தா தடையை நீக்கியது, இந்த வருடத்தில் வாங்கப்படும் பாரத் ஸ்டேஜ் 4 ரக வாகனங்களை தைரியமாகப் பயன்படுத்தலாம் போன்ற அறிவிப்புகள் வரவேற்க்கத்தக்கது எனச் சொல்லி இருக்கிறார்.
டொயோட்டா கிர்லோஷ்கர் நிறுவனத்தின் துணைத் தலைவர் விக்ரம் கிர்லோஷ்கர் பாரத் ஸ்டேஜ் 4 ரக வாகனங்கள் பயன்பாடு மட்டுமே வாடிக்கையாளர்களின் செண்டிமெண்டை மாற்றி வாகன விற்பனையை அதிகரிக்கச் செய்து விடும் எனச் சொல்லி இருக்கிறார்.
வாகனங்களுக்கான தேய்மானத்தை 15 அதவிகிதம் அதிகரித்ததால், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள் புதிய வாகனங்களை வாங்க ஊக்குவிக்கும் எனச் சொல்லி இருக்கிறார். இந்திய நகர் புறங்களில் சுமார் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட வாகன விற்பனைக்கு இந்த சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள் தான் பொறுப்பு எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
More From GoodReturns

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications